உலகிலேயே மிகவும் நீளமான மணாலி - லே சுரங்க நெடுஞ்சாலை நாளை நாட்டுக்கு அர்ப்பணிப்பு!!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: உலகிலேயே மிகவும் நீளமான 9 கிலோ மீட்டர் தொலைவிலான மணாலி - லே சுரங்க நெடுஞ்சாலையை நாளை காலை 10 மணிக்கு நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணிக்கிறார். இதற்கு அடல் சுரங்கப்பாதை என்று பெயரிடப்பட்டுள்ளது.
இமாசலப்பிரதேச மாநிலத்தில் மணாலி - லே இடையிலான 9 கிலோ மீட்டர் தொலைவிலான சுரங்கப்பாதை (நெடுஞ்சாலை)கடந்த பத்தாண்டுகளாக அமைக்கப்பட்டது. அடல் சுரங்கப்பாதை என்று பெயரிடப்பட்டு இருக்கும் இந்த சுரங்கப்பாதை குதிரை ஷூ வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரட்டைபாதை கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சுரங்கத்தின் மூலம் மணாலியில் இருந்து லே செல்லும் தூரத்தில் 46 கி.மீ., குறைவதுடன், 4 மணி நேர பயண நேரமும் இனி மிச்சமாகும். இந்த சுரங்கப்பாதையின் சிறப்புக்கள் என்னவென்று பார்ப்போம்:
- 9 கி. மீட்டர் தொலைவில் ரூ. 3,500 கோடி செலவில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
- மணாலி - லே இடையில் ஏழு மணி நேர பயண நேரத்தை மிச்சப்படுத்தும்
- குளிர் காலத்தில் இமாசலப் பிரதேசம் மற்றும் லடாக் பகுதிகளில் இருக்கும் சில பகுதிகளுக்கு செல்ல முடியாது. இனி அந்த சிக்கல் இருக்காது. இந்த சுரங்கப் பாதை போக்குவரத்து மூலம் இமாசலப் பிரதேசம் மற்றும் லடாக்கின் எந்தப் பகுதிகளுக்கும் செல்லலாம்.
- இது சுற்றுலாப் பயணிகளை மட்டும் ஈர்க்காது. அந்தப் பகுதிகளில் வேலை வாய்ப்பையும் அதிகரிக்கும்.
- மேலும், லஹால்-ஸ்பிட்டி ஆகிய இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகளை அதிகரிக்கும்.
- ஒவ்வொரு 150 கி. மீட்டருக்கும் தொலைபேசி வசதி செய்யப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு 60 மீட்டருக்கும் தீயணைப்பு வசதி உள்ளது.
- ஒவ்வொரு 500 மீட்டருக்கும் எமர்ஜென்சி வெளியேற்றம் அமைக்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு ஒரு 2.2 கி. மீட்டருக்கு காற்றின் தரம் கண்காணிக்கப்படும். ஒவ்வொரு 250 மீட்டருக்கும் சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டுள்ளது.
- பயணிகளுக்கு பயண நேரத்தை மட்டுமின்றி, பயணச் செலவையும் சேமிக்கிறது.
- 14,508 மெட்ரிக் டன் ஸ்டீல், 2,37,596 மெட்ரிக் டன் சிமெண்ட், 14 லட்சம் கியூபிக் மீட்டர் மணல் மற்றும் கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
- புதிய ஆஸ்திரேலிய தொழில்நுட்பத்தில் இந்த சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
- கடந்தாண்டு மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 95வது பிறந்த நாளை முன்னிட்டு இந்த சுரங்கப் பாதைக்கு அடல் சுரங்கப்பாதை என்று மத்திய அரசு பெயர் வைத்துள்ளது.
- 2000 ஆம் ஆண்டில் பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது அந்த ஆண்டில், ஜூன் 3ஆம் தேதி இந்த சுரங்கப்பாதை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டது.
More From
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications