ஒவ்வொருவரின் வளர்ச்சிக்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன், பீகார் மக்களுக்கு நன்றி: பிரதமர் வாழ்த்து
பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார்
டெல்லி: பீகார் மக்கள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வாக்களித்துள்ளதாக பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு 3 கட்டங்களாக சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்தது.. இதன் வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலையில் இருந்து தொடங்கியது.. விடிய விடிய நீடித்த வாக்கு எண்ணும் பணியில், இறுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது.

பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை என்ற நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களையும் மெகா கூட்டணி 110 இடங்களையும் கைப்பற்றி உள்ளது.
லோக் ஜனசக்தி கட்சி ஒரு இடத்தை மட்டுமே கைப்பற்றியது.. மற்ற கட்சிகள் 7 இடங்களில் வெற்றி பெற்றன.. இதையடுத்து பீகாரில் மறுபடியும் நிதிஷ் குமார் ஆட்சி அமைவது கிட்டத்தட்ட உறுதி ஆகி உள்ளது. இந்த வெற்றியை பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.. பல பாஜக தலைவர்கள் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டும் வருகின்றனர்.
பாஜகவின் வெற்றி குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்து, வாழ்த்தும் தெரிவித்துள்ளார். "பீகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 122 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி ஆட்சியைப் பிடிக்க முடியும். தற்போது, பாஜக கூட்டணி வெற்றி முகத்தில் இருப்பதால் பாஜக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். வெற்றிக்கு பாடுபட்ட என்டிஏ கூட்டணி தொண்டர்களுக்கு நன்றி" என்று பதிவிட்டிருந்த நிலையில், பீகார் மக்கள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வாக்களித்துள்ளதாக பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

"பீகார் மக்களுக்கு நன்றி. ஜனநாயகத்தின் முதல் பாடத்தை பீகார் உலகிற்கு கற்றுத் தந்திருக்கிறது. பாஜக கூட்டணி வெற்றிபெற வாக்களித்த பெண்களுக்கு நன்றி. பீகாரின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் வழிகாட்டியுள்ளனர். மக்களின் ஆசீர்வாதத்துடன் பீகாரில் ஜனநாயகம் மறுபடியும் வென்றது.
பீகார் அனைத்து என்டிஏ தொழிலாளர்களும் அவர்களுடன் பணியாற்றிய உறுதியும் அர்ப்பணிப்பும் பிரமிக்க வைக்கிறது... நான் தொழிலாளர்களை வாழ்த்துகிறேன்.. பீகார் மக்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக கொள்கிறேன்... கிராம-ஏழைகள், விவசாயி-தொழிலாளர்கள், வணிகர்-கடைக்காரர்கள், பீகாரின் ஒவ்வொரு பகுதியும் என்டிஏவின் 'சப்கா சாத், சபா விகாஸ், சப்கா விஸ்வாஸ்' என்ற மந்திரத்தை நம்பியுள்ளன. ஒவ்வொரு நபரின், ஒவ்வொரு பிராந்தியத்தின் சமச்சீர் வளர்ச்சிக்கு நாங்கள் முழு அர்ப்பணிப்புடன் தொடர்ந்து பணியாற்றுவோம் என்று பீகாரின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நான் மீண்டும் உறுதியளிக்கிறேன்.
பீகாரின் சகோதரிகள் மற்றும் மகள்கள் இந்த முறை சாதனை எண்ணிக்கையில் வாக்களித்துள்ளனர், இது தன்னிறைவு பெற்ற பீகாரில் தங்கள் பங்கு எவ்வளவு பெரியது என்பதையே வெளிக்காட்டுகிறது. கடந்த வருடங்களில் பீகாரின் தாய் சக்திக்கு புதிய நம்பிக்கையை வழங்க என்டிஏவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததில் நாங்கள் திருப்தி அடைகிறோம்.. இந்த நம்பிக்கை பீகாரை முன்னேற்றுவதில் எங்களுக்கு பலம் தரும் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு பிரதமர் மோடியே காரணம் என லோக் ஜன சக்தி கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார். "பிரதமர் மோடி மீதான தங்கள் நம்பிக்கையை பீகார் மக்கள் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளனர்... பாஜக மீது மக்கள் ஆர்வம் கொண்டிருப்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இது பிரதமர்மோடிக்கு கிடைத்த வெற்றி" என கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications