கொரோனா 3ஆம் அலையில் சிறார்கள் அதிகம் பாதிக்கப்படுவார்களா? உலக சுகாதார அமைப்பின் விளக்கம் இதுதான்
டெல்லி: கொரோனா 3ஆம் அலையில் இளைஞர்களைக் காட்டிலும் சிறார்கள் அதிகளவில் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் தற்போது தான் 2ஆம் அலை மெல்லக் குறைந்து வருகிறது. இந்நிலையில், விரைவில் கொரோனா 3ஆம் அலை ஏற்படும் என்றும் அதில் சிறார்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவின.
இது குறித்து உலக சுகாதார அமைப்பும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையும் ஆய்வு நடத்தியது. அதன்படி ஐந்து மாநிலங்களிலுள்ள 10 ஆயிரம் பேரிடம் செரோ சர்வே நடத்தப்பட்டது.

சிறார்களை அதிகம் பாதிக்காது
இதில் கொரோனா ஆன்டிபாடிகள் இளைஞர்களைவிடச் சிறார்களிடம் அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. உலக சுகாதார அமைப்பு & டெல்லி எய்ம்ஸ் நடத்திய இந்த செரோ சர்வே முறையில் இளைஞர்களைக் காட்டிலும் குழந்தைகளிடையே ஆன்டிபாடிகள் அதிகமாக இருப்பது தெரிய வந்தது. எனவே, வரும் காலத்தில் கொரோனா 3ஆம் அலை ஏற்பட்டால் அது குழந்தைகளை அதிகம் பாதிக்க வாய்ப்பில்லை" என அதில் கூறப்பட்டுள்ளது.

டெல்லிவாசிகள்
குறிப்பாக தெற்கு டெல்லி பகுதியில் உள்ள 2-17 வயதுடைய சிறார்களில் 73.9% பேரின் உடலில் ஆன்டிபாடிகள் இருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல அப்பகுதியில் இருக்கும் 18+ வயதுடைய 74.8% பேரின் உடலில் ஆன்டிபாடிகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. அதாவது கொரோனா 2ஆம் அலையில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட டெல்லியின் தெற்கு பகுதியில் வசிப்பவர்கள் மத்தியில் ஆன்டிபாடிகள் அதிகம் உள்ளதாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளைத் திறக்கலாம்
மேலும் சிறார்களுக்கு மத்தியில் அதிகளவில் ஆன்டிபாடிகள் உள்ளதால் டெல்லியின் நகர்ப்புறங்களில் உள்ள பள்ளிகளைத் திறக்கலாம் என இதில் கூறப்பட்டுள்ளது. டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும், முதல் அலைக்கு பிந்தைய நிலையுடன் ஒப்பிடும்போது, அதிகளவிலான மக்களுக்கு ஆன்டிபாடிகள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் கிராமப்புறங்களில் சிறார்கள் மத்தியில் 87.9 சதவீதமும் 18+ வயதுடையவர்கள் மத்தியில் 90.3 சதவீதமும் ஆன்டிபாடிகள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

கொரோனா ஆன்டிபாடிகள்
பழங்குடியினர் அதிகம் வாழும் திரிபுரா மாநிலத்தின் கிராமப்புறங்களில் மிகக் குறைந்த அளவாக 51.9 சதவீதம் பேருக்கு ஆன்டிபாடிகள் உள்ளன. ஒட்டுமொத்தமாகக் கிராமப்புற மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு, அதாவது 62.3% பேருக்கு கொரோனா ஆன்டிபாடிகள் உள்ளதாக இதில் கூறப்பட்டுள்ளன. ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டாலோ அல்லது தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டாலோ அவர்களின் உடலில் ஆன்டிபாடிகள் உற்பத்தியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications