இந்தியாவில் உச்சத்தில் கொரோனா... அனைத்து மாநில ஆளுநர்களுடன்... பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை
டெல்லி: கொரோனா பாதிப்பு தொடர்பாகப் பிரதமர் மோடி இன்று அனைத்து மாநில ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அனைத்து மாநில ஆளுநர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார். இந்தக் கூட்டத்தில் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்களும் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவும் பங்கேற்கிறார்.
இதில் கொரோனா பரவல் குறித்தும், அதனை நிறுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவலுக்குப் பிறகு நடைபெறும் அனைத்து ஆலோசனைக் கூட்டங்களைப் போலவே இதுவும் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த வாரம் அனைத்து மாநில முதல்வர்களுடன் கொரோனா பாதிப்பு தொடர்பாகப் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவாக மேற்கொள்ள ஏதுவாக டிக்கா உத்சவ் என்ற தடுப்பூசி திருவிழாவை நடத்துமாறு அனைத்து மாநில முதல்வர்களிடம் அவர் கேட்டுக் கொண்டார். அதன்படி கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி திருவிழா நடைபெற்றது.
-
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications