இந்தியாவில் உச்சத்தில் கொரோனா... அனைத்து மாநில ஆளுநர்களுடன்... பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை
டெல்லி: கொரோனா பாதிப்பு தொடர்பாகப் பிரதமர் மோடி இன்று அனைத்து மாநில ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அனைத்து மாநில ஆளுநர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார். இந்தக் கூட்டத்தில் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்களும் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவும் பங்கேற்கிறார்.
இதில் கொரோனா பரவல் குறித்தும், அதனை நிறுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவலுக்குப் பிறகு நடைபெறும் அனைத்து ஆலோசனைக் கூட்டங்களைப் போலவே இதுவும் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த வாரம் அனைத்து மாநில முதல்வர்களுடன் கொரோனா பாதிப்பு தொடர்பாகப் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவாக மேற்கொள்ள ஏதுவாக டிக்கா உத்சவ் என்ற தடுப்பூசி திருவிழாவை நடத்துமாறு அனைத்து மாநில முதல்வர்களிடம் அவர் கேட்டுக் கொண்டார். அதன்படி கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி திருவிழா நடைபெற்றது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications