போராட்டங்கள் வலுத்த நிலையில், சபரிமலை தீர்ப்புக்கு எதிராக கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு!
டெல்லி: சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு, சமீபத்தில் சபரிமலை தொடர்பான வழக்கில் செப்டம்பர் 28ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில், அனைத்து வயது பெண்களும், சபரிமலையில் வழிபட அனுமதி உண்டு என்று தெரிவித்தனர்.

இதையடுத்து, சபரிமலை பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில்தான், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில், அதன் தலைவர், ஷியாலஜா விஜயன், சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இப்போது சபரிமலை நடை திறப்புக்கு பிறகு போராட்டங்கள் இன்னும் வலுக்கும் நிலையில், கேரளா பிராமணர் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில், சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே உள்ள வழக்கில் பிரதிவாதியாக இல்லாத ஒரு புதிய அமைப்புகள் வழக்கு தொடர்ந்திருப்பதால், இதை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்குமா என்பது சந்தேகம். ஒருவேளை விசாரித்தாலும், ஓபன் கோர்ட்டில் வைத்து விசாரித்துவிட்டு அப்படியே நகரவே வாய்ப்புள்ளது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
தேவசம் போர்டு, கேரள அரசு போன்ற வழக்கில் சம்மந்தப்பட்ட தரப்பினர், தாங்கள் சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என்று அறிவித்துவிட்டது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications