இந்தியா வந்தது ரஷ்யாவின் "ஸ்புட்னிக் வி" வேக்சின்.. அடுத்த வாரமே மக்கள் பயன்பாட்டிற்கு வரும்!
டெல்லி: ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி வேக்சின் தற்போது இந்தியாவிற்கு வந்துள்ளது. அடுத்த வாரம் இது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் விகே பால் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுக்க கொரோனாவிற்கு எதிராக பாரத் பயோடெக், ஆக்ஸ்போர்ட் ஆஸ்டர்செனகா, பெசிபர், ஜான்சனன் ஜான்சான், மாடர்னா உள்ளிட்ட பல நிறுவனங்கள் வேக்சின்களை உருவாக்கி உள்ளது. ரஷ்யா சார்பாகவும் ஸ்புட்னிக் வி உருவாக்கப்பட்டது.
ரஷ்ய அரசு சார்பாக உருவாக்கப்பட்ட இந்த வேக்சின் அங்கு முதல் கட்டமாக ராணுவத்திடம் சோதனை செய்யப்பட்டு பின் மூன்று கட்ட சோதனைகளை கடந்து மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. கொரோனாவிற்கு எதிராக ஒரு நாட்டு அரசு அனுமதி அளித்த முதல் வேக்சின் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா
இந்த ஸ்புட்னிக் வி வேக்சின் உருவாக்கப்பட்ட போதில் இருந்தே இந்தியா இதை வாங்கும் முடிவில் இருந்தது. ரஷ்யாவும் இந்த ஸ்புட்னிக் வி வேக்சினை இந்தியாவில் விற்பனை மற்றும் உற்பத்தி செய்யும் முடிவில் இருந்தது. இதற்காக டாக்டர் ரெட்டி ஆய்வகத்துடன் ரஷ்யா ஒப்பந்தமும் செய்தது.

இந்தியா
இந்த நிலையில் தற்போது ஸ்புட்னிக் வி வேக்சின் இந்தியாவிற்கு வந்துள்ளது. இந்த வேக்சின் அடுத்த வாரத்தில் இருந்து மக்களுக்கு கிடைக்கும். இந்தியாவிற்கு வந்த டோஸ்கள் பிரித்து அளிக்கப்படும். இது முதல் கட்ட ஏற்றுமதிதான்.

உற்பத்தி
விரைவில் மேலும் ஸ்புட்னிக் வி வேக்சின் இந்தியா வரும். அதற்கு ஏற்றபடி மாநிலங்களுக்கு பிரித்து கொடுக்கப்படும் என்று நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி கே பால் தெரிவித்துள்ளார். அதோடு இந்த வேக்சின் டாக்டர் ரெட்டி ஆய்வகம் மூலம் இந்தியாவிலும் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

மக்கள்
15.6 கோடி வேக்சின்களை உற்பத்தி செய்யும் முடிவில் அந்த நிறுவனம் உள்ளது. ஸ்புட்னிக் வி வேக்சின்களை மொத்தம் 2 பில்லியன் டோஸ் உற்பத்தி செய்ய அந்த ஆய்வகம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி வேக்சின் கடந்த ஏப்ரல் 12ம் தேதி அனுமதி பெற்றது.

தட்டுப்பாடு
இந்த வேக்சினுக்கு 91.6% கொரோனா தடுப்பாற்றல் உள்ளது. இதுவரை செய்யப்பட சோதனைகளில் எல்லாம் இந்த வேக்சின் பாதுகாப்பானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்புட்னிக் வி வேக்சின் வருகையால் இந்தியாவில் வேக்சின் தட்டுப்பாடு கொஞ்சம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications