மே 1ம் தேதி வருகிறது ரஷ்யாவின் ஸ்புட்னிக்.. இந்தியர்களுக்கு 3வது தடுப்பூசி
டெல்லி: ரஷ்யாவின் கொரோனாவைரஸ் தடுப்பூசியான ஸ்புட்னிக் வி-யின் முதல் தொகுப்பு மே 1ம் தேதி இந்தியாவுக்கு வரவுள்ளது.
இந்தத் தகவலை ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைவர் கிர்ரில் டிமிட்ரியேவ் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதற்கிடையே, ரஷ்யாவைச் சேர்ந்த மருந்து நிறுவனமான பார்மசினிடெஸ் இந்தியாவுக்கு ரெம்டெசிவர் மருந்தையும் சப்ளை செய்யவுள்ளது. முதல் கட்டமாக 10 லட்சம் ரெம்டெசிவர் மருந்து பேக்குகள் மே இறுதியில் இந்தியாவுக்கு வரவுள்ளன.
இந்தியாவுக்கு ஆண்டுதோறும் 850 மில்லியன் டோஸ் ஸ்புட்னிக் தடுப்பு மருந்தை அனுப்ப ஏற்கனவே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 5 நிறுவனங்கள் இந்த மருந்தைப் பெற்று இந்தியா முழுவதும் விநியோகிக்கவுள்ளன.
முதல் கட்டமாக எத்தனை டோஸ் மருந்து இந்தியாவுக்கு வருகிறது என்று தெரியவில்லை. ஆனால் மே 1ம் தேதி முதல் இந்தியாவுக்கு சப்ளை தொடங்கும் எனத் தெரிவித்துள்ளார் டிமிட்ரியேவ்.
இந்தியாவில் 2வது கொரோனா அலை விஸ்வரூபம் எடுத்துள்ளது. வட இந்தியாவில் மிகப் பெரும் பாதிப்பை இது ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவிலும் பாதிப்பு அதிகம் உள்ளது. கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களும் தப்பவில்லை.
தற்போது இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் என 2 தடுப்பு மருந்துகள் மக்களுக்கு தரப்பட்டு வருகின்றன. இதில் 3வது மருந்தாக இணைகிறது ரஷ்யாவின் ஸ்புட்னிக்.
அதேபோல மாடர்னா மற்றும் ஜான்சன் அன்ட் ஜான்சன் ஆகியவற்றின் தடுப்பு மருந்துகளையும் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என்று அதன் தயாரிப்பாளர்கள் மத்திய அரசிடம் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications