தமிழகத்தை சேர்ந்த உச்சநீதிமன்ற முதல் பெண் நீதிபதி பானுமதி இன்றுடன் பணி ஓய்வு- உருக்கமான பிரியா விடை
டெல்லி: தமிழகத்தின் உச்சநீதிமன்ற முதல் பெண் நீதிபதி என்ற பெருமைக்குரிய நீதிபதி பானுமதி இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.
நீதிபதியாக தாம் பணி புரிந்த காலத்தில் தேசத்தை திரும்பிப் பார்க்க வைத்த பல தீர்ப்புகளை வழங்கியவர் நீதிபதி. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த போது ஜல்லிக்கட்டு, கிடா சண்டை அத்தனைக்குமே தடை விதித்து தீர்ப்பு அளித்தவர் நீதிபதி பானுமதி.

பிரேமானந்தா சாமியார் வழக்கு
மிகவும் பிரபலமான பிரேமானந்தா சாமியார் மீதான பலாத்கார வழக்கில் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பான தீர்ப்பு வழங்கினார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள்- போலீசார் இடையேயான மோதலில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டவரும் நீதிபதி பானுமதிதான்.

நிர்பயா வழக்கில் தீர்ப்பு
தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ள தடை விதித்தார்; சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் போலீசாருக்கான பணிமூப்பு உயர்வை ரத்து செய்தார்; தேசத்தையே அதிர வைத்த நிர்பயா பலாத்கார வழக்கில் நீதிபதி பானுமதி பெஞ்ச்தான் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கியது; ஐ.என்.எக்ஸ் வழக்கில் திஹார் சிறையில் இருந்த முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியதும் நீதிபதி பானுமதி.

பணி ஓய்வு- பிரியா விடை நிகழ்ச்சி
இத்தகைய பரபரப்பான தீர்ப்புகளை வழங்கிய நீதிபதி பானுமதி இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். அவருக்கு வெள்ளிக்கிழமையன்று பிரியாவிடை அளிக்கும் நிகழ்ச்சி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நடைபெற்றது. அப்போது பேசிய நீதிபதி பானுமதி, தமது தந்தை விபத்தில் இறந்தார். அப்போது தமக்கு 2வயது. ஆனால் நீதித்துறை குழப்பங்களால் சட்டப்படி எங்களுக்கான தீர்வு வழங்கப்படாமலேயே போனது என உருக்கமாக சுட்டிக்காட்டினார்.

சொந்த ஊர் ஊத்தங்கரை
தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 1955-ம் ஆண்டு பிறந்தவர் நீதிபதி பானுமதி. சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டம் படித்த பானுமதி, 1988-ல் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தமிழகத்தில் பல மாவட்டங்களில் அமர்வு நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்தார். பின் 2003-ல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.

தமிழகத்தின் முதல் உச்சநீதிமன்ற பெண் நீதிபதி
2013-ல் ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் 2014 ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் நியமனம் செய்யப்பட்டார். உச்சநீதிமன்றத்தில் 6-வது பெண் நீதிபதி என்பதுடன் தமிழகத்தை சேர்ந்த உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமைக்குரியவரானார் பானுமதி. உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளை தேர்வு செய்யும் கொலிஜியத்தில் இடம்பெற்ற 2-வது பெண் நீதிபதியும் பானுமதி ஆவார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications