ஆம்பளைங்க மேல நம்பிக்கையில்ல! சிவனும் சக்தியும் நானே! தன்னை தானே கல்யாணம் செய்து கொண்ட நடிகை கனிஷ்கா
டெல்லி : ஆண்கள் மீது நம்பிக்கை நம்பிக்கை இல்லாமல் தனியாக வாழ்வதே சிறந்தது என தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டதாக அறிவித்த நடிகை கனிஷ்கா சோனி தற்போது தன் மீது எழுந்திருக்கும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
Recommended Video
தற்போதைக்கு இதுதான் ட்ரெண்ட் என்பது போல பெண்கள் பலரும் ஆண்கள் மீது நம்பிக்கை இல்லை எனக் கூறி தங்களை தாங்களே திருமணம் செய்து கொள்வதாக அதிரடி முடிவுகளை அறிவித்து வருகின்றனர்.
அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் இது சகஜமாக இருந்தாலும் இந்தியாவில் இது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி கடும் கண்டனங்களை பெற்றது.

சுய திருமணம்
இது ஒரு புறம் இருந்தாலும் குஜராத்தை சேர்ந்த நடிகை ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னைத்தானே திருமணம் செய்து கொள்வதாக கூறினார். பவித்ரா ரிஷ்தா என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் நடித்து இந்திய அளவில் பிரபலமான கனிஷ்கா சோனி தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

எந்த ஆணும் தேவையில்லை
அதில்,"எனது கனவுகள் அனைத்தையும் நிறைவேற்றியதில் இருந்து என்னையே திருமணம் செய்து கொண்டேன், நான் காதலிக்கும் ஒரே நபர் நானே. நான் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில், எனக்கு எந்த ஆணும் தேவையில்லை... நான் மகிழ்ச்சியாக எப்போதும் தனியாகவும் தனிமையிலும் என் கிடாருடன் இருக்கிறேன். நானே தெய்வம் சிவன் மற்றும் சக்தி அனைத்தும் எனக்குள் உள்ளது" என பதிவிட்டிருந்தார்.

கலாச்சார சீர்கேடு
இந்தியாவில் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட இரண்டாவது பெண்ணாக கனிஷ்கா சோனி தன்னை வெளிப்படுத்திய நிலையில் தனியாக வாழ்வது சிறந்தது என தாலி குங்குமத்துடன் திருமண புகைப்படத்தை அவர் வெளியிட்டதோடு தனது முழு மனதுடன் இந்த முடிவை எடுத்திருந்ததாக கூறியிருந்தார். இந்த நிலையில் இந்தியாவில் இதுபோன்ற கலாச்சார சீர்கேடுகளை அனுமதிக்க கூடாது என பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர், இது ஒரு புறம் இருக்க கனிஷ்கா சூனியின் instagram பக்கத்தில் முகாமில் நெட்டிசன்கள் பலரும் அவரது நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வந்தனர்,

தக்க பதிலடி
இந்த நிலையில் அவர்களுக்கு கேள்விகளுக்கு எல்லாம் பதிலடி கொடுத்து இருக்கிறார் கனிஷ்கா. இதுகுறித்து அவர் மீண்டும் வெளியிட்டுள்ள பதிவில்,"என்னுடைய சுய திருமண முடிவு குறித்து நீங்கள் நிறைய கேள்விகளை எழுப்பியுள்ளீர்கள் என்று எனக்குத் தெரியும், நான் இந்திய கலாச்சாரத்தை உண்மையாக நம்புகிறேன், அதனால்தான் நான் தனிமையில் வாழத் தேர்ந்தெடுத்தேன். திருமணம் என்பது செக்ஸ் பற்றியது அல்ல, ஒருவர் தேடும் அன்பு மற்றும் நேர்மை பற்றியது

நோக்கம் இல்லை
அந்த நம்பிக்கையை நான் இழந்துவிட்டேன், எனவே வெளி உலகில் தேடுவதை விட தனியாக வாழ்வதும் என்னை நேசிப்பதும் சிறந்தது, ஆனால் கூகிள் டிரெண்டிங்கிலும் செய்திகளிலும் எனது போஸ்டை பிரபலமாக்கியதற்கு மிக்க நன்றி இருந்தாலும்... அது என் நோக்கம் இல்லை. இது எனது முழு மனதுடன் எடுக்கப்பட்ட முடிவு, நான் இப்போது அமெரிக்காவில் இருக்கிறேன் மற்றும் எனது வாழ்க்கையில் கவனம் செலுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்." என கூறியுள்ளார்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications