அட்டர்னி ஜெனரல் பதவி.. மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி
டெல்லி: இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக உள்ள கேகே வேணுகோபாலின் பதவிக்காலம் வரும் 30ம் தேதி முடிகிறது. இந்நிலையில் தான் புதிய அட்டர்னி ஜெனரலாக பதவி ஏற்க மத்திய அரசு கூறியதை மூத்த வழக்கறிஞரான முகுல் ரோஹத்கி மறுத்துள்ளார்.

இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக மூத்த வக்கீலான 91 வயது நிரம்பிய கேகே வேணுகோபால் செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த 2017 முதல் இந்த பதவியில் செயல்பட்டு வருகிறார். அட்டர்னி ஜெனரல் பதவி என்பது பொதுவாக 3 ஆண்டு காலத்துக்கு உரியது.
அதன்படி கேகே வேணுகோபால் பதவிக்காலம் 2020ல் முடிவுக்கு வந்தது. ஆனால் அவர் கேட்டு கொண்டதன் அடிப்படையில் மேலும் 2 ஆண்டுகள் வரை அவரது பதவிக்காலம் நீட்டிப்பு செய்யப்பட்டது. 5 ஆண்டுகள் ஆன நிலையில் கேகே வேணுகோபாலின் பதவிக்காலம் கடந்த ஜூன் 30ம் தேதி முடிவடைந்தது. இருப்பினும் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
அதன்படி ஜூன் மாதத்தில் இருந்து கூடுதலாக 3 மாதம் வரை கேகே வேணுகோபால் இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்து வருகிறது. இந்த பதவி நீட்டிப்பு காலம் என்பது வரும் 30ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதனால் அடுத்த அட்டர்னி ஜெனரல் நியமனம் தொடர்பான நடைமுறைகள் தொடங்கின.
அதன்படி இந்திய அட்டர்னி ஜெனரலாக 67 வயது நிரம்பிய மூத்த வக்கீல் முகுல் ரோஹத்கியை மத்திய அரசு தேர்வு செய்தது. இதுபற்றி அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் முகுல் ரோஹத்கி அட்டர்னி ஜெனரல் பதவியை ஏற்க மறுத்துள்ளார். இதில் எந்த குறிப்பிட்ட காரணமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது அட்டர்னி ஜெனரலாக பதவியேற்க மறுப்பு தெரிவித்து முகுல் ரோஹத்கி, இந்தியாவின் 14 வது அட்டர்னி ஜெனரலாக செயல்பட்ட அனுபவம் கொண்டவர். அதாவது கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2017-ம் ஆண்டு ஜூன் வரை இவர் அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்தார். அதன்பிறகு ராகுல் ரோஹத்கிக்கு பதில் கேகே வேணுகோபால் புதிய அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டார். தற்போது அவரது பதவிக்காலம் முடிவுக்கு வந்ததால் அந்த பதவிரை ராகுல் ரோஹத்கி மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications