Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழர்கள் எதுக்குங்க இந்தி பேசனும்! எந்த சட்டத்துல எழுதி இருக்கு..அஜய் தேவ்கனை விளாசிய சோனு நிகாம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி : நாட்டில் அதிகம் பேசப்படும் மொழி இந்தி என்றாலும், இந்தி மொழி பேசாத மக்கள் மீது திணிக்க முடியாது, ஏனெனில் அந்த மொழி "தேசிய மொழி" என்று அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை என்று கூறியுள்ள பாடகர் சோனு நிகம், தமிழர்கள் எதற்காக இந்தி பேச வேண்டுமென கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த வியாழன் அன்று பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுக்கும் கன்னட நடிகர் சுதீப் சஞ்சீவ்க்கும் இடையே நடந்த சூடான கருத்துப் பரிமாற்றம், இந்தி தேசிய மொழியா? என்ற சூடான விவாதத்தை கிளப்பியது.

பல ஊடகங்களிலும் இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில், இந்தி நமது தேசிய மொழி அல்ல என்று சுதீப் சுட்டிக்காட்டிய நிலையில், தென்னிந்திய மொழிகளில் உள்ள திரைப்படங்கள் ஏன் இந்தியில் டப் செய்யப்படுகிறது என்று அஜய் தேவ்கன் கேள்வி எழுப்பினார்.

பலத்த சர்ச்சை

பலத்த சர்ச்சை

இந்த பரிமாற்றம் சமூக ஊடகங்களில் ஒரு விவாதத்தைத் கிளப்பிய நிலையில், அரசியல்வாதிகளும் இந்த விவாதத்தில் இணைந்தனர். அஜய் தேவ்கன் பாஜகவின் ஊதுகுழலாகப் பேசுகிறார் என்று கர்நாடகத்தைச் சேர்ந்த பல அரசியல் கட்சி தலைவர்களும் குற்றம் சாட்டினர். இந்தி விவகாரத்தில் சினிமா மட்டும் சிக்கவில்லை. கடந்த மாதம், உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தியை அலுவல் மொழியாக்கலாம் என கூறிய நிலையில், பல தென்னகத் தலைவர்கள் இந்தியைத் திணிக்கும் எந்த முயற்சியும் பலனளிக்காது என்று எச்சரித்திருந்தனர்.

இந்தி திணிப்பு

இந்தி திணிப்பு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா அமைச்சர் கே.டி.ராமராவ் உள்ளிட்ட தலைவர்கள் அமித் ஷாவின் கருத்துக்கு எதிராகப் பேசியதுடன், வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் பலம் என்று வலியுறுத்தினர். இந்நிலையில் 'அவர்கள் (தமிழர்கள்) ஏன் இந்தியில் பேச வேண்டும்?' என கேள்வி எழுப்பியுள்ள பிரபல இந்தி பாடகர் சோனு நிகம் "எங்கள் நீதிமன்றங்களில் கூட, தீர்ப்புகள் ஆங்கிலத்தில் உள்ளன," என்று கூறியுள்ளார்.

சோனு நிகாம் கருத்து

சோனு நிகாம் கருத்து

நாட்டில் அதிகம் பேசப்படும் மொழி இந்தி என்றாலும், இந்தி மொழி பேசாத மக்கள் மீது திணிக்க முடியாது, ஏனெனில் அந்த மொழி "தேசிய மொழி" என்று அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை என்ற பாடகர் சோனு நிகம், "எனது அறிவின்படி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தி தேசிய மொழியாக எழுதப்படவில்லை. இது குறித்தும் நிபுணர்களுடன் கலந்தாலோசித்தேன். நாட்டில் அதிகம் பேசப்படும் மொழி இந்தி என்பது எனக்குப் புரிகிறது. அதைச் சொன்னதும் தமிழ் என்பதை நாங்கள் அறிவோம்.

பழமையான மொழி தமிழ்

பழமையான மொழி தமிழ்

உலகின் பழமையான மொழியா? என சமஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் இடையே விவாதம் நடந்து வருகிறது.உலகிலேயே தமிழ்தான் மிகப் பழமையான மொழி என்று மக்கள் சொல்கிறார்கள் எனவும் அவர் கூறினார். ஏற்கனவே பல உள்நாட்டு பிரச்சனைகளை சந்தித்து வரும் நாட்டில் இந்த சர்ச்சை தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் என்ற நிகாம், நாட்டில் குறைவான பிரச்சனைகள் தான் உள்ளதா, நீங்கள் தமிழர், நீங்கள் இந்தி பேச வேண்டும்

Recommended Video

    Sudeep VS Ajay Devgan Controversy | Sudeep-க்கு குவியும் தலைவர்களின் ஆதரவு | Oneindia Tamil
     அஜய் தேவ்கனுக்கு கேள்வி

    அஜய் தேவ்கனுக்கு கேள்வி

    பிறர் மீது மொழியைத் திணித்து நாட்டில் நல்லிணக்கத்தை சிதைக்க முயற்சிப்பதா? அவர்கள் பேச விரும்பும் மொழியை பேச மக்களுக்கு உரிமை இருக்க வேண்டும்" என்றார். மேலும் அஜய் தேவ்கனுக்கு சரியான பதில் அளித்துள்ள சோனு நிகம், இந்த நாட்டில் மக்களை மேலும் பிளவுபடுத்த வேண்டாம், இந்தி நமது தேசிய மொழி என்று எங்கே எழுதப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+