இன்று மமதா செய்தார்.. அதேபோல அன்று மோடி, ஜெயலலிதா செய்தனரே.. டிவிட்டரில் ஒரு விவாதம்!
டெல்லி: குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் மன்மோகன்சிங் கூட்டிய தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தை மோடி புறக்கணித்தார்; அதே பாணியில் மோடியின் ஆய்வு கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பங்கேற்காதது பெரிய குற்றமா? என சமூக வலைதளங்களில் அவரது ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேற்கு வங்கத்தில் யாஸ் புயல் சேத விவரங்களை பிரதமர் மோடி நேற்று பார்வையிட்டு ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இதற்காக கொல்கத்தாவுக்கு பிரதமர் மோடி சென்றிருந்தார்.
ஆனால் மேற்கு வங்க முதல்வரான மமதா பானர்ஜி, மோடி வருகை தந்த பின்னர் 20 நிமிடங்கள் தாமதமாகவே அவரை சந்தித்தார். இதனால் மோடி காத்திருக்க வேண்டியதாயிற்று.

மோடி ஆய்வு கூட்டம்- மமதா புறக்கணிப்பு
அத்துடன் மோடியை சந்தித்து புயல் சேத விவர அறிக்கையை கொடுத்துவிட்டு ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்காமல் சென்றுவிட்டார் மமதா. இது நாடு தழுவிய அளவில் பெரிய சர்ச்சையாகிவிட்டது. இதனால் கோபம் அடைந்த மத்திய அரசு, மேற்கு வங்க தலைமை செயலாளரை மத்திய அரசு பணிக்கு அழைத்துள்ளது.

ஜெ.மோடி புறக்கணிப்பு
மமதா பானர்ஜியின் நடவடிக்கையை பாஜகவினர் பலரும் சமூக வலைதளங்களில் விமர்சிக்கின்றனர். அதேநேரத்தில் மமதாவின் ஆதரவாளர்களோ, அவரது நடவடிக்கையை நியாயப்படுத்துகின்றனர். அத்துடன் பல ஆண்டுகளுக்கு முன்னர் சில சம்பவங்களையும் சுட்டிக்காட்டுகின்றனர். 2011-ம் ஆண்டு தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, குஜராத் முதல்வராக இருந்த மோடி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், பஞ்சாப் முதல்வராக இருந்த பாதல் ஆகியோர் புறக்கணித்தனர்.

ஜெயலலிதா வெளிநடப்பு
2012-ம் ஆண்டு டெல்லியில் தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தாம் பேசிக் கொண்டிருந்த போது முடித்து கொள்ள மணி அடித்ததால் கோபம் அடைந்தார் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா. அதனால் அவர் தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் இருந்தே வெளிநடப்பும் செய்தார்.

2013-ல் மோடி புறக்கணிப்பு
2013-ம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்தார் மோடி. அப்போது பிரதமராக இருந்த மன்மோகன்சிங் தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தை மீண்டும் கூட்டியிருந்தார். அந்த கூட்டத்தை மோடி புறக்கணித்திருந்தார். அதாவது பிரதமர் கூட்டிய கூட்டத்துக்கு மாநில முதல்வராக இருந்த போகவில்லை. அதேபோல் சத்தீஸ்கர் முதல்வராக இருந்த ரமன்சிங்கும் பங்கேற்கவில்லை.

மமதா மீது மட்டும் தவறா?
தற்போது இந்த சம்பவங்களைக் குறிப்பிட்டு முதல்வர்களாக இருந்த மோடி, ஜெயலலிதா உள்ளிட்டோர் செய்தால் அது சரி... அதையே மமதா பானர்ஜி முதல்வராக இருந்து செய்தால் தவறா? அதுவும் மோடியை சந்தித்து அறிக்கையையும் கொடுத்துவிட்டுதானே போனார் மமதா? இதில் என்ன தப்பு கண்டுபிடிக்கிறீர்கள்? என கொந்தளிக்கின்றனர் மமதாவின் ஆதரவாளர்கள். சமூக வலைதளங்களில் இதுதான் ஹாட் டாபிக்.
-
கட்சியையே பறிகொடுக்கும் மம்தா? மே.வங்கத்தில் எதிர்க்கட்சி தலைவரான சஸ்பெண்ட் எம்எல்ஏ! ரிதப்ரதா பானர்ஜி யார்? -
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications