விவசாயிகள், பொதுமக்கள் மீது மோடி அரசுக்கு அக்கறை இல்லை.. சோனியா காந்தி விமர்சனம்
டெல்லி: விவசாயிகள் மீதும் பொதுமக்கள் மீதும் மோடி அரசுக்கு அக்கறை இல்லை என காங்கிரஸ் நாடாளுமன்ற எம்பிக்கள் கூட்டத்தில் சோனியா காந்தி விமர்சனம் செய்தார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 26 மசோதாக்களை நிறைவேற்ற ஆளும் அரசு முடிவு செய்திருந்தது. அது போல் 700 விவசாயிகள் உயிரிழப்புக்கு பிறகு வேளாண் சட்டங்கள் ரத்து செய்தது, பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகளும் முடிவு செய்திருந்தன.
இந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி கூட்டத் தொடரின் முதல் நாள் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. அந்த சட்டம் இரு அவைகளிலும் கொண்டு நிறைவேற்றப்பட்டன. இந்த நிலையில் கடந்த மழைக்கால கூட்டத் தொடரில் அமளியில் ஈடுபட்டதாக கூறி இந்த கூட்டத் தொடர் முழுவதும் 12 ராஜ்யசபா எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

12 எம்பிக்கள்
அன்று முதல் 7ஆவது நாளாக இன்று வரை 12 எம்பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்ய கோரி நாடாளுமன்றத்தில் காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ராஜ்யசபா தொடர்ந்து 3ஆவது நாளாக பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.

காங்கிரஸ் நாடாளுமன்ற எம்பிக்கள்
இந்த நிலையில் இன்று அவை கூடுவதற்கு முன்னர் காங்கிரஸ் நாடாளுமன்ற எம்பிக்கள் கூட்டம் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் கூடியது. அப்போது சோனியா பேசுகையில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தின் போது 700 விவசாயிகள் தங்கள் உயிரை தியாகம் செய்தனர்.

விவசாயிகள்
அவர்களின் தியாகத்தை நாம் மதிக்க வேண்டும். விவசாயிகள், பொதுமக்கள் மீது மோடி அரசுக்கு அக்கறையே இல்லை. அத்தியாவசிய பொருட்களின் விலைஉயர்வால் ஒவ்வொரு குடும்பத்திலும் மாதாந்திர பட்ஜெட்டில் கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. எல்லை விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் முழு வீச்சில் விவாதம் எழுப்ப வேண்டும்.

போதுமான நடவடிக்கை இல்லை
12 எம்பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை முன்னெப்போதும் இல்லாதது, ஏற்றுக் கொள்ள முடியாதது. 12 எம்பிக்களுக்கு நாம் ஆதரவு கொடுப்போம். பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலையை குறைக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் போதுமானது அல்ல என்றார் சோனியா காந்தி.
-
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்











Click it and Unblock the Notifications