2024 பிரதமர் தேர்தல்.. “ரெடி”யாகும் சோனியா! டெல்லி வரும் நிதீஷ், லாலு - “6 ஆண்டு”க்கு பின் சந்திப்பு
டெல்லி: அண்மையில் பாஜக கூட்டணியிலிருந்து பிரிந்து சென்ற நிதீஷ் குமார், ஆர்.ஜே.டி. காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அவரையும் ஆர்.ஜே.டி. கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவை இன்று சந்திக்கிறார் சோனியா காந்தி
பீகார் மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணி அரசை நடத்தி வந்த நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி கடந்த ஆண்டு மோதல்களின் காரணமாக கூட்டணியை முறித்துக் கொண்டு ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி ஆட்சியை அமைத்தது.
இந்த நிலையில் பீகார் முதலமைச்சராக பதவியேற்ற கையோடு 2024 மக்களவை தேர்தலுக்காக தயாராகி வருகிறார் நிதீஷ் குமார். தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் உடனான சந்திப்பு தொடங்கி அடுத்தடுத்த சந்திப்புகளை நடத்தி வருகிறார்.

தலைவர்களுடன் சந்திப்பு
இந்த நிலையில் இம்மாத தொடக்கத்தில் 4 நாள் பயணமாக டெல்லி சென்ற அவர் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோரை சந்தித்துப் பேசினார். அதேபோல் சமாஜ்வாடி கட்சித் தலைவர்கள் முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் எச்சூரி, ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அர்விந்த் கெஜ்ரிவால் ஆகியோரை சந்தித்தார்.

சோனியா காந்தி
"எங்கள் முதன்மையான நோக்கம் என்பது நாட்டு நலனுக்காக ஒற்றுமையை கட்டமைப்பதுதான். யார் தலைவர் என்பது பின்னர் முடிவு செய்யப்படும். பிரபலமான முகத்தை விட ஒற்றுமையான கூட்டணியே நாட்டுக்கு அவசியம். சோனியா காந்தி வெளிநாட்டில் இருந்து டெல்லி திரும்பிய பிறகு மீண்டும் அங்கு சென்று அவரை சந்திக்க உள்ளேன்." என்றார்.

இன்று சந்திப்பு
இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சி புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி, ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை என பரபரப்புடன் காணப்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்தியா திரும்பிய சோனியா காந்தி இன்று பீகார் முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமாரையும், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவையும் சந்திக்க இருக்கிறார்.

6 ஆண்டுகளுக்கு பின்
இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் நிறுவனர் சௌதாரி தேவி லாலின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் நடைபெற இருக்கும் பேரணியில் நிதீஷ் குமார், லாலு பிரசாத் ஆகியோர் பங்கேற்க வருகை தருகிறார்கள். அப்போது இருவரும் சோனியா காந்தியை சந்திக்க உள்ளார்கள். சோனியா காந்தியை இவ்விரு தலைவர்களும் 6 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பது குறிப்பிடத்தக்கது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications