Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“பனி குல்லா” ஓகே.. “ஹிஜாப்” கூடாதா? நீதிபதி அடித்த “ஜோக்” - உச்சநீதிமன்றத்தில் குபீர் சிரிப்பலை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஹிஜாப் வழக்கின் 8 வது நாள் விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று பரபரப்பாக நடைபெற்ற நிலையில், நீதிபதிகள் தெரிவித்த கருத்தால் சிரிப்பலை எழுந்தது.

கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து செல்ல அரசு விதித்த தடைக்கு எதிராக உடுப்பி மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த கர்நாடக உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் இறுதித் தீர்ப்பை வழங்கியது.

அதில் ஹிஜாப் இஸ்லாத்தில் அத்தியாவசியமானது இல்லை என்றும், பள்ளிகளில் சீருடையை பின்பற்ற வேண்டும் என்ற கர்நாடக அரசின் உத்தரவில் தவறு இல்லை எனவும் கூறி மாணவிகளின் வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம்

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஹேமந்த் குப்தா, சுதன்சு துலியா அமர்வு முன்பு கடந்த 5 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. கடந்த 8 நாட்கள் நடைபெற்ற விசாரணையில் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன.

மஃப்ளர், கண்ணாடி

மஃப்ளர், கண்ணாடி

இன்று நடைபெற்ற 8 வது நாள் வழக்கு விசாரணையில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜராகி கர்நாடக அரசின் ஹிஜாப் தடைக்கு ஆதரவாக வாதாடினார். அப்போது நீதிபதி துலியா, "தேவைப்பட்டால் கண்ணாடி அணிவது, பனி குல்லா அணிவதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்க, வழக்கறிஞர் மேத்தா, அது மத அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை." என்றார்.

ஹிஜாபை ஏன் அனுமதிக்கக் கூடாது

ஹிஜாபை ஏன் அனுமதிக்கக் கூடாது

உடனே நீதிபதி துலியா, "தொப்பி அல்லது பனி குல்லாவை ஒரே நிறத்தில் அணிய அனுமதிக்கும்போது ஹிஜாபை ஏன் அனுமதிக்கக் கூடாது?" என்று கேட்க, அது மத அடையாளத்தை வெளிப்படுத்தாவிட்டால் அணியலாம் என்றார் வழக்கறிஞர் மேத்தா. அப்போது நீதிபதி துலியா, அப்படியென்றால் இது பொது ஒழுங்கு பிரச்சனையா? என்று கேட்டார்.

உச்சநீதிமன்றத்தில் சிரிப்பலை

உச்சநீதிமன்றத்தில் சிரிப்பலை

அதற்கு வழக்கறிஞர் மேத்தாவோ, "எங்களுடைய மதநம்பிக்கை ஹிஜாபை அணிய வலியுறுத்துகிறது என்று அவர்கள் சொல்கிறார்கள்." என்று கூறினார். உடனே நீதிபதி துலியா, "அவர்கள் சொல்லட்டும். நான் குளிரில் இருந்து பாதுகாக்க அணிகிறேன்." என்று கூற மற்றொரு நீதிபதி குப்தாவோ, "கர்நாடகாவில் அந்த அளவுக்கு குளிர் அதிகம் இருக்காது." என்று சொன்னவுடன் உச்சநீதிமன்றத்தில் சிரிப்பலை எழுந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+