நீட் தேர்வு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பாத தமிழக ஆளுநர்- லோக்சபாவில் தமிழக எம்.பிக்கள் கண்டனம்
டெல்லி: நீட் தேர்வு மசோதாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுக்கு அனுப்பாமல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி காலம் தாழ்த்துவதாக லோக்சபாவில் தமிழக எம்.பிக்கள் கண்டனம் தெரிவித்தனர்.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது தமிழகத்தின் ஒட்டுமொத்த கோரிக்கை. நீட் நுழைவுத் தேர்வு தரும் நெருக்கடியால் மருத்துவ படிப்பை பறிகொடுத்த அனிதா தொடங்கி மாண்வர்கள் மரணம் தொடருகிறது.

நீட் மசோதாவும் ஆளுநரும்
இதனையடுத்து தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததும் நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய கோரி சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் தமிழக ஆளுநருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல தமிழக சட்டசபை தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை.

நாடாளுமன்றத்தில்..
இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தும் வலியுறுத்தினார். இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட தமிழக எம்.பிக்கள் இன்று நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் விவகாரத்தை எழுப்பினர். நாடாளுமன்ற வளாகத்திலும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தும் பதாகைகளுடன் திமுக உள்ளிட்ட தமிழக எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர்.

நாடாளுமன்றத்தில்..
இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தும் வலியுறுத்தினார். இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட தமிழக எம்.பிக்கள் இன்று நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் விவகாரத்தை எழுப்பினர். நாடாளுமன்ற வளாகத்திலும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தும் பதாகைகளுடன் திமுக உள்ளிட்ட தமிழக எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர்.

லோக்சபாவில் டி.ஆர்.பாலு
லோக்சபாவில் இது குறித்து பேசிய திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு, அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 200-ன் கீழ், தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் மசோதாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பாமல், தமிழக ஆளுநர் காலம் தாழ்த்துவது சட்ட விரோதம் என்று விமர்சித்தார். அப்போது தமிழக எம்.பிக்கள் முழக்கங்களை எழுப்பினர்.

பதாகைகள்- முழக்கங்கள்
நீட் தேர்வை ரத்து செய்; நீட் தேர்வு ரத்து மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குக; என்கிற பதாகைகள் ஏந்தியபடி திமுக எம்.பிக்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனால் லோக்சபாவில் அமளி நிலவியது. இது தொடர்பாக இடதுசாரி எம்.பி. சு.வெங்கடேசன் தமது ட்விட்டர் பக்கத்தில், தமிழகத்தின் நீட் எதிர்ப்பு மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்கிட மக்களவையிலும், தமிழக மீனவர்கள் விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் உடனடியாக தலையிட கோரி மாநிலங்களவையிலும், விவசாயிகளை கார் ஏற்றிக் கொன்றதில் அமைச்சரை நீக்க வீதியிலும் போராடினோம்! என பதிவிட்டுள்ளார்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications