Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் 3.6% பேருக்கே.. முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.. அதிர்ச்சி அளிக்கும் தரவுகள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய மக்கள் தொகையில் இதுவரை 3% பேருக்கே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தரவுகள் அதிர்ச்சி தகவல் கூறுகின்றன.

Recommended Video

    Pregnancy, Periods இருக்கு போது பெண்கள் VACCINE எடுக்கலாம் | Dr.Karthika தெளிவான விளக்கம்

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தற்போது வெகுவாக குறைந்து வருகிறது. ஒரு கட்டத்தை 3,00,000-ஐ தாண்டிய தொற்று தற்போது 1,00,000-க்குள் அடங்கி விட்டது.

    கொரோனா குறைந்து வரும் இந்த வேளையில் நாட்டில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அனைத்து மாநிலமும் தடுப்பூசி தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளன.

    தடுப்பூசி பற்றாக்குறை

    தடுப்பூசி பற்றாக்குறை

    தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக திட்டமிட்டபடி இந்தியாவில் கடந்த மாதம் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி தொடங்கப்படவில்லை. அனைத்து மாநிலமும் தடுப்பூசியை எதிர்நோக்கி காத்திருக்கின்றன. தமிழகத்தில் கூட 3 நாட்கள் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    வெறும் 3% தான்

    வெறும் 3% தான்

    ஒருபக்கம் தடுப்பூசி பற்றாக்குறையை எதிர்நோக்கி இருந்தாலும், கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை இந்திய மக்கள் தொகையை ஒப்பிடும்போது வெறும் 3% தான் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரவுகள் கூறுகின்றன. அதாவது கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை 5 மாதங்களில் 3% பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.

    டெல்லி பரவாயில்லை

    டெல்லி பரவாயில்லை

    தலைநகர் டெல்லியில் இதுவரை 10.2% பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளன. அடுத்தபடியாக குஜராத்தில் 8.8% பேருக்கும், நமது அண்டை மாநிலமான கேரளாவில் 8.1% பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பில் நாட்டில் முதலிடம் பிடித்துள்ள மகாராஷ்டிராவில் 5.3% பேருக்கும், தெலுங்கானாவில் 4.7% பேருக்கும் மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளன.

    தமிழ்நாடு மிக மோசம்

    தமிழ்நாடு மிக மோசம்

    இதில் பீகார் மாநிலம் கடைசி இடத்தை பெற்றுள்ளது. அங்கு 2.5% பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நமது மாநிலமான தமிழ்நாடும் இந்த பட்டியலில் மோசமான நிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் 4% பேருக்கும் குறைவாக அதாவது 3.6% பேருக்கே இதுவரை முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தரவுகள் அதிர்ச்சி அடைய வைக்கின்றன.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+