இனியும் அஞ்ச மாட்டோம்.. சிறையை காட்டியும் அச்சுறுத்த முடியாது.. ஜாமீனில் விடுதலையான மாணவர்கள் பேச்சு
டெல்லி: சிஏஏ போராட்டத்தில் கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவர்கள் இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இனியும் சிறையில் அடைப்போம் என்று அவர்களால் எங்களை அச்சுறுத்த முடியாது என்றும் அப்படி அவர்கள் எங்களை அச்சுறுத்தினால், அது எங்கள் போராட்டத்தை வீரியத்தைத் தான் அதிகப்படுத்தும் என்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இருப்பினும், நாடு முழுவதும் சட்டத்திற்கு இந்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றது.
குறிப்பாக டெல்லியில் மிகப் பெரியளவில் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது தொடர்பாக நட்டாஷா நிர்வால், தேவங்கனா கலிட்டா, ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர் ஆஷப் டான்கா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

டெல்லி உயர் நீதிமன்றம்
இவர்கள் அனைவரையும் உபா சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். ஜாமீன் கோரி மூவர் தொடர்ந்த வழக்கு விசாரணை செய்த டெல்லி ஐகோர்ட் சில நாட்களுக்கு முன் மூவரும் ஜாமீன் வழங்கியது. மேலும் நாட்டில் உள்ள அனைவருக்கும் போராட்டம் நடத்தும் உரிமை உள்ளது என்றும் போராட்டம் நடத்துவது பயங்கரவாதம் இல்லை என்றும் கருத்து தெரிவித்தனர். இருப்பினும் இவர்களை போலீசார் விடுதலை செய்யவில்லை.

அஞ்ச மாட்டோம்
இதனிடையே மூவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என இன்று நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து வியாழக்கிழமை இரவு மூவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தேவங்கனா கலிட்டா, "நீதிமன்றத்தின் தீர்ப்பால் அரசு விரக்தி அடைந்துள்ளதையே அவாக்களின் நடவடிக்கை காட்டுகிறது. நாங்கள் அவர்களை கண்டு எல்லாம் அஞ்சப்போவதில்லை" என்றார்.

போராட்டம் என்பது பயங்கரவாதம் அல்ல
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மூவருக்கும் வெளியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக நட்டாஷா நிர்வால் கூறுகையில், "இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால் அது குறித்து கருத்து கூற விரும்பவில்லை. அதேநேரம் டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். போராட்டம் நடத்துவது என்பது பயங்கரவாதம் அல்ல. அது பெண்கள் தலைமையில் அமைதியாக நடைபெற்ற ஒரு எதிர்ப்பு போராட்டம்.

மிரட்ட முடியாது
சிறையில் அடைப்போம் என்று அவர்களால் எங்களை அச்சுறுத்த முடியாது. அப்படி அவர்கள் எங்களை அச்சுறுத்தினால், அது எங்கள் போராட்டத்தை வீரியத்தை தான் அதிகப்படுத்தும்" என்றார். நட்டாஷா நிர்வால் சிறையிலிருந்தபோது தான் அவரது தந்தை கொரோனாவால் காலமானர். இது குறித்து நட்டாஷா நிர்வால் கூறுகையில், "சிறை என்பது அன்புக்குரியவர்களிடமிருந்து நம்மைப் பிரிக்கும். இது நமக்கு இதைத்தான் நினைவூட்டுகிறது" என்றார்.

மேல் முறையீடு
மேலும், அற்பமான குற்றச்சாட்டுகளுக்காக மக்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள் என்று குறிப்பிட்ட அவர், ஒரு விஷயத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும்போது, அது பயங்கரவாதம் ஆகாது என்றும் கூறினார். டெல்லி உயர்நீதிமன்றம் மூவருக்கும் அளித்துள்ள ஜாமீனை எதிர்த்து டெல்லி காவல்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications