Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜேந்திர பாலாஜிக்கு இறுகும் பிடி.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வைத்த செக்.. கேவியட் மனு தாக்கல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆவின் நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது போலீசில் புகார்கள் வந்தன.

இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்பதை அறிந்து அவர் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

முன்னாள் ராஜேந்திர பாலாஜி

முன்னாள் ராஜேந்திர பாலாஜி

ஆனால் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் ராஜேந்திரபாலாஜியை கைது செய்யலாம் என்று போலீசாருக்கு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து கைது நடவடிக்கைக்கு பயந்து ராஜேந்திரபாலாஜி தலைமறைவாகி விட்டார். 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரை போலீசார் தேடி வருகின்றனர். தமிழகத்தின் மதுரை, கோவை, கொடைக்கானல் போன்ற பகுதிகளிலும், கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் தனிப்படை போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

லுக்-அவுட் நோட்ட்டீஸ்

லுக்-அவுட் நோட்ட்டீஸ்

ஆனாலும் ராஜேந்திர பாலாஜி போலீசாரின் கையில் சிக்காமல் தொடர்ந்து டிமிக்கி கொடுத்து வருகிறார். அவர் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுவிடாமல் இருப்பதற்காக விமான நிலையங்களுக்கு "லுக்-அவுட்" நோட்டீசும் போலீசார் அனுப்பி உள்ளனர். தற்போது ரூ.11 லட்சம் பண மோசடி வழக்கில் ராஜேந்திரபாலாஜி மீது மேலும் ஒரு புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது.

 உச்சநீதிமன்றத்திலும் செக்

உச்சநீதிமன்றத்திலும் செக்

ஜாமீன் தர முடியாது என்று உயர்நீதிமன்றம் கைவிரித்து விட்டதால் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளார். இங்கு ஜாமீன் கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்து வரும் நிலையில் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும் செக் வைத்துள்ளது தமிழக அரசு. அதாவது ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

Recommended Video

    Who Is Rajendrabalaji | அறிவிப்பாளர் முதல் அமைச்சர் வரை
    எங்கள் விளக்கத்தை கேட்காமல்...

    எங்கள் விளக்கத்தை கேட்காமல்...

    ''ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் தொடர்பாக எங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் எந்த ஓரு உத்தரவும் பிறப்பிக்க கூடாது'' என்று கேவியட் மனுவில் தமிழக அரசு கூறியுள்ளது. உச்சநீதிமன்றம் முன்ஜாமீன் தொடர்பாக விசாரிக்கும்போது தமிழக அரசின் கருத்தை கேட்கும் பட்சத்தில் ராஜேந்திர பாலாஜிக்கு முன்ஜாமீன் கிடைப்பதில் வாய்ப்பு குறைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+