ஜம்மு காஷ்மீர் தனி நாடு.. சர்ச்சையை கிளப்பிய ட்விட்டின் புதிய மேப்.. கடும் கோபத்தில் மத்திய அரசு
டெல்லி: மத்திய அரசுக்கும் ட்விட்டருக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ட்விட்டர் தளத்தில் இந்தியா மேப்-இல் இருந்த பிரித்து காஷ்மீரை தனியாகக் காட்டியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டிலுள்ள சமூக வலைத்தளங்களுக்கும் ஓடிடி தளங்களுக்கும் மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தியது. இந்த புதிய சட்டத்தை மற்ற அனைத்து தளங்களும் ஏற்றுக் கொண்ட போதிலும், ட்விட்டர் ஏற்றுக் கொள்ளவில்லை.
இதனால் மத்திய அரசுக்கும் ட்விட்டர் நிறுவனத்திற்கும் இடையே கடந்த சில வாரங்களாகவே மோதல் நிலவி வருகிறது.

தனி நாடு
இந்தச் சூழ்நிலையில். ட்விட்டரிலுள்ள உள்ள மேப் ஒன்றில் ஜம்மு & காஷ்மீர், லடாக் பகுதிகளை இந்தியாவின் ஒரு அங்கமாகக் காட்டாமல் வேறு ஒரு நாடாகக் காட்டியுள்ளது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ட்விட்டர் தளத்தில் Tweep Life என்ற செக்ஷனில் தான் ஜம்மு & காஷ்மீர் இப்படித் தனி நாடாகக் காட்டப்பட்டுள்ளது. இது ட்விட்ரில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கடும் நடவடிக்கை
ட்விட்டர் நிறுவனத்தின் இந்தச் செயலுக்கு எதிராகப் பலரும் தங்கள் எதிர்ப்புகளைப் பதிவிட்டு வருகின்றனர். ஏற்கனவே, புதிய ஐடி விதிகளுக்கு உட்படாமல் இருப்பது, அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ட்விட்டர் பக்கம் முடக்கம் என பல்வேறு விஷயங்களில் ட்விட்டர் நிறுவனத்தின் மீது மத்திய அரசு கடும் கோபத்தில் உள்ளது. இதனால் அந்நிறுவனத்திற்கு எதிராக மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்முறை இல்லை
ட்விட்டர் நிறுவனம் இந்தியாவின் மேப்-ஐ இப்படி தவறாகக் காட்டுவது இது ஒன்றும் முதல் முறை இல்லை. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் லடாக் யூனியன் பிரதேசத்தை சீனாவின் ஒரு பகுதியாக ட்விட்டர் காட்டியது. இதனைக் கடுமையாகக் கண்டித்த மத்திய அரசு, இது தொடர்பாக ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ஜேக் டார்ஸிக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது. அதன் பின்னரே ட்விட்டர் தனது தவறை சரி செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

குறைதீர்ப்பு அதிகாரி
முன்னதாக, புதிய ஐடி விதிகளின்படி ட்விட்டரின் இடைக்கால அதிகாரியாக தர்மேந்திரா சாத்தூர் இன்று ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து கலிபோர்னியாவை சேர்ந்த ஜெர்மி கேசல் என்பவரை ட்விட்டர் இந்தியாவின் புதிய குறைதீர்ப்பு அதிகாரியாக அந்நிறுவனம் நியமனம் செய்துள்ளது. இருப்பினும், அரசின் ஐடி விதிகளின்படி இந்தியர் ஒருவரைத் தான் இந்தப் பொறுப்பில் நியமிக்க வேண்டும். மத்திய அரசுக்கும் டவிட்டருக்கும் இடையே இருக்கும் மோதலில் இதுவும் புதிதாக இணைந்துள்ளது.











Click it and Unblock the Notifications