3.5 கோடி மக்களுக்கு வேலையில்லை.. மாதம் 20 லட்சம் பேர் வேலை இழக்கிறார்கள்.. இந்தியா நிலைமை இதுதான்
டெல்லி: அதிகரித்து வரும் கொரோனா பரவல் மற்றும், மத்திய அரசு போதிய அளவுக்கு நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளாமல் இருப்பது போன்றவற்றால், ரூ.30 லட்சம் கோடி மதிப்புக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியை, நமது நாடு இழக்க நேரிடும். வேலையில்லா திண்டாட்டம் பெரும் தலைவலியாக மாறக்கூடும் என்று எச்சரிக்கின்றன புள்ளி விவரங்கள்.
கொரோனா பாதிப்பையடுத்து, பெரும்பாலான ஆய்வாளர்கள் கணித்ததைவிடவும் இந்திய பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது. எனவே தங்கள் மதிப்பீட்டை வல்லுநர்கள் மாற்றியமைத்து வருகின்றனர்.
உதாரணமாக, இந்தியாவைச் சேர்ந்த பொருளாதார பகுப்பாய்வு நிறுவனமான, கிரிசில் (Crisil) தனது மே மாத மதிப்பீட்டை மாற்றியுள்ளது. செப்டம்பர் மாத புதுப்பித்த அப்டேட்டில், பொருளாதார மந்த நிலை மேலும் மோசமாகியுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளது.

இரு காரணங்கள்
இதற்கு இரண்டு முக்கிய காரணங்களை அந்த அமைப்பு கூறுகிறது: கொரோனா தொற்றுநோயின் உச்சநிலை இன்னும் இந்தியாவில் எட்டப்படவில்லை. மற்றும் அரசு போதுமான நேரடி நிதி ஆதரவை வழங்கவில்லை. எனவே, இக்காரணங்களால், எங்களது முந்தைய மதிப்பீட்டை மாற்றியுள்ளோம் என்று தெரிவித்துள்ளது கிரிசில்.

உள்நாட்டு உற்பத்தி
லாக்டவுனையடுத்து, அறிவிக்கப்பட்ட பொருளாதார பேக்கேஜ்படி கணக்கிட்டால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 1.2% க்கும் மேலாக அரசு செலவழிக்கும் என்று மே மாதத்தில் கிரிசில் எதிர்பார்த்தது. ஆனால் இது நடக்கவில்லை. இதன் விளைவாக, இந்தியா உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13% நிரந்தர இழப்பை சந்திக்கும் என்று கிரிசில் மதிப்பிட்டுள்ளது. இது ஆசிய-பசிபிக் பிராந்தியத்திலுள்ள பிற நாடுகளின் 3% என்ற, சராசரி ஜிடிபி இழப்பை விட மிக அதிகம். அதாவது இந்த நாடுகளின் சராசரி இழப்பைவிட நமது நாட்டில் 10 சதவீதம் கூடுதல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

ரூ.30 லட்சம் கோடி
பண மதிப்பு அடிப்படையில், இந்த இழப்பு சுமார் 30 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். எளிமையாகச் சொன்னால், இந்த பொருளாதார சீர்குலைவு இந்தியாவிடமிருந்து ரூ.30 லட்சம் கோடியை கொள்ளையடிக்கும் என்று சொல்லலாம். இது 2020-21ம் நிதியாண்டு பட்ஜெட் தொகைக்கு இணையானது. ஆனால், ஆத்மனிர்பார் பாரத் அபியான் பேக்கேஜ் (தற்சார்பு இந்தியா) மூலம், பொருளாதாரத்தில் ரூ .3 லட்சம் கோடிக்கும் குறைவாகவே அரசு பங்களித்துள்ளது.

வேலையிழப்பு நிலவரம்
இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் வியாஸ், ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் அளித்துள்ள பேட்டியில்,
இந்தியா எதிர்கொள்ளும் வேலைவாய்ப்பு சவால் எவ்வளவு கடுமையானது என்று விளக்கினார். இந்தியாவில் தற்போது 35 மில்லியனுக்கும் அதிகமான (3.5 கோடி) மக்கள் வேலையின்றி இருக்கிறார்கள். கொரோனா பரவியதற்கு பிறகு, சுமார் 2.1 கோடி வேலை இழக்கப்பட்டுள்ளன, இவை அவசரமாக மீட்கப்பட வாய்ப்பில்லை.

வேலைவாய்ப்பு
ஏற்கனவே 3.5 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு இல்லாத நிலையில், ஒவ்வொரு மாதமும், மேலும் 20 லட்சம் உழைக்கும் வயது மக்களை (அதாவது 15 வயது முதல் 59 வயது வரையிலானவர்கள்) இந்த பட்டியலில் சேர்க்கப்போகிறது. ஒரு வருடத்தில், இந்தியா சுமார் 9.6 மில்லியன் (சுமார் 1 கோடி) புதிய வேலைகளை உருவாக்க வேண்டும். எனவே இந்த நிதியாண்டின் முடிவில், மேலும் வேலைவாய்ப்புகள் இழக்கப்படாமல் தடுக்கப்படுவதோடு, இந்தியாவுக்கு புதிதாக 4.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க தேவையுள்ளது. இப்போதைக்கு இந்தியாவின் முக்கிய தேவை, வேலைவாய்ப்புகளை பெருக்குவதுதான், இதற்கு, அரசு அதிக பொது நிதியை செலவிட தேவையுள்ளது.
-
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications