மத்திய அரசின் ‛செக்’.. மாநில அரசுகள் தொலைக்காட்சி ஒளிபரப்ப அதிரடி தடை.. தமிழக அரசு கேபிள் நிலை?
டெல்லி: இந்தியாவில் மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசுகள் சார்பில் தொலைக்காட்சி தொடங்கி ஒளிரப்பு செய்யவும், தொலைக்காட்சி சார்ந்த் சேவைகள் வழங்கவும் மத்திய அரசு அதிரடியாக தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் அரசு கேபிள், கல்வி தொலைக்காட்சி மத்திய அரசின் பிரசார் பாரதி கட்டுப்பாட்டில் செல்ல உள்ளது.
இந்தியாவில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பில் தகவல் தொடர்பு சார்ந்த உரிமங்களை வழங்கி வருகிறது. அதாவது தபால், தந்தி, தொலைபேசி, வயர்லெஸ், தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவைகளின் உரிமங்கள் வழங்கப்படுகின்றன.
இந்தியாவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சுதந்திரமாக இயங்கும் பொதுத்துறை அமைப்பு தான் பிரசார் பாரதி. இது மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது.

மாநில அரசுகளுக்கு தடை
இந்நிலையில் தான் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் நேற்று அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி மத்திய, மாநில, யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசுகளின் அமைச்சகங்கள், துறைகள் சார்பில் வரும் காலத்தில் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் தொலைக்காட்சி சார் சேவைகள் வழங்கக்கூடாது.

பிரசார் பாரதி வழியாக..
இதனை மத்திய பொதுத்துறை அமைப்பான பிரசார் பாரதி மட்டுமே மேற்கொள்ள உள்ளது. அதன்படி தொலைக்காட்சி சேவைகளில் அரசு, அரசு சார்ந்த துறைகளுக்கு என்று தனியாக சேனல்கள் இருப்பின் அதனை மத்திய ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி கட்டுப்பாட்டுக்குள் எடுத்து இயங்க செய்யும். மாநில அரசுகள் சார்பில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி சேனல்களின் நிறுவனங்கள் 2023 டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள் அதனை நிறுத்தி கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்த அறிவிப்பின்படி மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசாங்கங்கள் அல்லது அதன் துறைகள் சார்பில் ஒளிபரப்பு செய்யப்படும் சேனல்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் பிரசார் பாரதி கட்டுப்பாட்டில் எடுத்து கொள்ளப்பட உள்ளது. இதன்மூலம் மாநில அரசுகள் நடத்தும் சேனல்களின் அனைத்து கொள்கைகளும் பிரசார் பாரதியின் வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டு நிகழ்ச்சிகள் தடையின்றி ஒளிபரப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தின் நிலவரம் என்ன?
இந்த அறிவிப்பால் தமிழகத்தை பொறுத்தமட்டில் தமிழ்நாடு அரசு கேபிள் மற்றும் கல்வி தொலைக்காட்சி ஆகியவை மத்திய அரசின் கீழ் போக வாய்ப்புள்ளது. இதேபோல் ஆந்திராவில் அரசின் ஐபிடிவியும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் செல்ல உள்ளது. குறிப்பாக மாநில அரசுகள் சார்பில் தங்கள் மாநில மக்களுக்காகவும், மாணவர்களுக்காகவும் தனியாக தொலைக்காட்சிகளில் சேனல்கள் தொடங்கி ஒளிபரப்பி வருகின்றன. இந்த சேனலை மாநில அரசு கட்டுப்படுத்தி வந்த நிலையில் இது இனி மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு செல்வதை மாநில அரசுகள் விரும்பாது. இதனால் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு மாநில அரசுகள் எதிர்ப்புகள் தெரிவிக்க வாய்ப்புள்ளது.

பின்னணி காரணம் என்ன?
மத்திய அரசின் இந்த உத்தரவு என்பது திடீரென்று பிறப்பிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. அதாவது கடந்த 2012ல் மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசுகள் மற்றும் அதன் நிறுவனங்கள் தனியார் துறையுடன் சேர்ந்து தொலைக்காட்சி சேனல்கள் துவங்கி ஒளிபரப்பு செய்ய அனுமதி கூடாது என டிராய் எனும் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கூறியது. இந்த பரிந்துரையின்படி பெங்கால் கிரிக்கெட் சங்கம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கியது. இதன் தொடர்ச்சியாக தான் டிராய் பரிந்துரை, சட்டத்துறை அமைச்சகம் கூறிய கருத்துகளை பரிசீலித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications