வி.பி.என் இனி பிரைவசி கிடையாது.. எல்லாமே கண்காணிக்கப்படும்.. புது ரூல்ஸ் போட்ட அரசு!
டெல்லி: வி.பி.என் சேவை வழங்கும் நிறுவனங்கள் இந்தியாவில் அதனைப் பயன்படுத்துபவர்களின் தகவல்களை 5 ஆண்டுகளுக்கு சேமித்து வைக்க வேண்டும் என தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
புதிய நடைமுறையைப் பின்பற்றத் தவறினால் தகவல் தொழில்நுட்ப சட்டப்படி சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பிரைவசிக்காக வி.பி.என் சேவைகளை நாடும் பயன்பாட்டாளர்ளுக்கு, இந்த உத்தரவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வி.பி.என் நெட்வொர்க்
விர்ச்சுவல் பிரைவட் நெட்வொர்க் எனப்படும் வி.பி.என் சேவை மூலமாக ஒருவர் தங்கள் இருப்பிடத்தை மறைத்து இணையத்தில் உலவ முடியும். இதன் மூலம் தடைசெய்யப்பட்ட இணையதளங்களை அணுகமுடியும்.
இந்தியாவில் பிரைவசிக்காகவும், தடை செய்யப்பட்ட கேம்களை விளையாடுவதற்கும், ஆபாச படங்கள் பார்ப்பதற்கும் வி.பி.என் தளங்களை பலரும் உபயோகிக்கின்றனர். தீவிரவாத செயல்களுக்கும் வி.பி.என் பயன்படுத்தப்படக்கூடும்

புதிய உத்தரவு
இந்நிலையில், வி.பி.என் சேவை வழங்கும் நிறுவனங்கள் இந்தியாவில் அதனைப் பயன்படுத்துபவர்களின் தகவல்களை 5 ஆண்டுகளுக்கு சேமித்து வைக்க வேண்டும் என மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சைபர் பாதுகாப்புக்கான சி.இ.ஆர்.டி அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
சி.இ.ஆர்.டி உத்தரவின்படி, இனி வி.பி.என் பயனர்களின் தகவல்களை 5 ஆண்டுகளுக்கு சேமித்து வைத்திருக்க வேண்டும். மேலும், கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை நிறுவனங்களும் பயனர்களின் பரிவர்த்தனை விவரங்களை 5 ஆண்டுகளுக்கு சேமித்து வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறை தண்டனை
சமூக ஊடக கணக்குகள், அங்கீகரிக்கப்படாத அணுகல் உட்பட 20 தரவுகளை அரசுக்கு வி.பி.என் நிறுவனங்கள் அளிக்க வேண்டும். இது சந்தேகப்படும்படி எதேனும் நடந்திருந்தால், உடனடியாக விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஜூலை மாதம் முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வர உள்ளது. இதனைப் பின்பற்றத் தவறினால் தகவல் தொழில்நுட்ப சட்டப்படி சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பயன்பாட்டாளர்கள் அதிர்ச்சி
இலவசமாக மட்டுமல்லாது கட்டணம் செலுத்தி பெறும் வி.பி.என் சேவைகளும் உள்ளன. இவற்றைப் பயன்படுத்துவதால் தனியுரிமை தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும் என பயன்பாட்டாளர்கள் அவற்றை நாடுகின்றனர்.
பிரைவசிக்காக வி.பி.என் சேவைகளை நாடும் பயன்பாட்டாளர்ளுக்கு, இந்த உத்தரவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் தகவல்களும் சேமித்துக் கொள்ளப்படுமானால் எதற்காக நாங்கள் வி.பி.என் பயன்படுத்த வேண்டும் என்பதே பயனர்களின் கேள்வியாக உள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications