வி.பி.என் இனி பிரைவசி கிடையாது.. எல்லாமே கண்காணிக்கப்படும்.. புது ரூல்ஸ் போட்ட அரசு!
டெல்லி: வி.பி.என் சேவை வழங்கும் நிறுவனங்கள் இந்தியாவில் அதனைப் பயன்படுத்துபவர்களின் தகவல்களை 5 ஆண்டுகளுக்கு சேமித்து வைக்க வேண்டும் என தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
புதிய நடைமுறையைப் பின்பற்றத் தவறினால் தகவல் தொழில்நுட்ப சட்டப்படி சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பிரைவசிக்காக வி.பி.என் சேவைகளை நாடும் பயன்பாட்டாளர்ளுக்கு, இந்த உத்தரவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வி.பி.என் நெட்வொர்க்
விர்ச்சுவல் பிரைவட் நெட்வொர்க் எனப்படும் வி.பி.என் சேவை மூலமாக ஒருவர் தங்கள் இருப்பிடத்தை மறைத்து இணையத்தில் உலவ முடியும். இதன் மூலம் தடைசெய்யப்பட்ட இணையதளங்களை அணுகமுடியும்.
இந்தியாவில் பிரைவசிக்காகவும், தடை செய்யப்பட்ட கேம்களை விளையாடுவதற்கும், ஆபாச படங்கள் பார்ப்பதற்கும் வி.பி.என் தளங்களை பலரும் உபயோகிக்கின்றனர். தீவிரவாத செயல்களுக்கும் வி.பி.என் பயன்படுத்தப்படக்கூடும்

புதிய உத்தரவு
இந்நிலையில், வி.பி.என் சேவை வழங்கும் நிறுவனங்கள் இந்தியாவில் அதனைப் பயன்படுத்துபவர்களின் தகவல்களை 5 ஆண்டுகளுக்கு சேமித்து வைக்க வேண்டும் என மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சைபர் பாதுகாப்புக்கான சி.இ.ஆர்.டி அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
சி.இ.ஆர்.டி உத்தரவின்படி, இனி வி.பி.என் பயனர்களின் தகவல்களை 5 ஆண்டுகளுக்கு சேமித்து வைத்திருக்க வேண்டும். மேலும், கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை நிறுவனங்களும் பயனர்களின் பரிவர்த்தனை விவரங்களை 5 ஆண்டுகளுக்கு சேமித்து வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறை தண்டனை
சமூக ஊடக கணக்குகள், அங்கீகரிக்கப்படாத அணுகல் உட்பட 20 தரவுகளை அரசுக்கு வி.பி.என் நிறுவனங்கள் அளிக்க வேண்டும். இது சந்தேகப்படும்படி எதேனும் நடந்திருந்தால், உடனடியாக விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஜூலை மாதம் முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வர உள்ளது. இதனைப் பின்பற்றத் தவறினால் தகவல் தொழில்நுட்ப சட்டப்படி சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பயன்பாட்டாளர்கள் அதிர்ச்சி
இலவசமாக மட்டுமல்லாது கட்டணம் செலுத்தி பெறும் வி.பி.என் சேவைகளும் உள்ளன. இவற்றைப் பயன்படுத்துவதால் தனியுரிமை தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும் என பயன்பாட்டாளர்கள் அவற்றை நாடுகின்றனர்.
பிரைவசிக்காக வி.பி.என் சேவைகளை நாடும் பயன்பாட்டாளர்ளுக்கு, இந்த உத்தரவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் தகவல்களும் சேமித்துக் கொள்ளப்படுமானால் எதற்காக நாங்கள் வி.பி.என் பயன்படுத்த வேண்டும் என்பதே பயனர்களின் கேள்வியாக உள்ளது.
-
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்!












Click it and Unblock the Notifications