மத்திய அரசின் ஐடி விதிகளை பின்பற்ற.. எல்லா முயற்சிகளையும் செய்து வருகிறோம்.. இறங்கி வரும் டிவிட்டர்!
டெல்லி: மத்திய அரசின் புதிய ஐடி விதிகளை பின்பற்ற எல்லா முயற்சிகளையும் செய்து வருவதாக டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சமூக வலைத்தளங்களையும், ஓடிடி தளங்களையும் கட்டுப்படுத்த மத்திய அரசு நீண்ட காலமாக முயன்று வருகிறது. இதற்காக கடந்த பிப்ரவரி மாதம் மத்திய தகவல் தொழில்நுட்ப துறை மூலம் சமூக வலைத்தளங்களுக்கும், ஓடிடி தளங்களுக்கும் புதிய விதிகள் கொண்டு வரப்பட்டன.
அதன்படி இந்த சமூக வலைத்தளம் மற்றும் ஓடிடி தளங்கள் தங்களிடம் வரும் புகார்களை விசாரிப்பதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும். அரசு வைக்கும் புகார்களை இந்த அதிகாரிதான் விசாரிக்க வேண்டும். இந்த விதிகளை பின்பற்ற கடந்த மாதம் வரை அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது. பேஸ்புக், கூகுள் இதை பின்பற்றுவதாக அறிவித்தது.

டிவிட்டர்
இந்த நிலையில் டிவிட்டர் நிறுவனம் மத்திய அரசின் புதிய ஐடி விதிகளை பின்பற்றாமல் காலம் தாழ்த்தி வந்தது. இதனால் மத்திய அரசுக்கும், டிவிட்டர் நிறுவனத்திற்கும் இடையில் மோதல் வந்தது. ஏற்கனவே டூல் கிட் விவகாரத்திலும், பாஜக தலைவர்கள் டிவிட்டில் manipulative tag போட்ட விவகாரத்திலும் கடும் மோதல் நிலவி வந்தது.

ஐடி விதி
இந்த நிலையில் ஐடி விதிகளை பின்பற்றாமல் இருந்தது இன்னும் பெரிய சிக்கலை ஏற்படுத்தியது. இதையடுத்து புதிய ஐடி விதிகளை பின்பற்றவில்லை என்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து இருந்தது. டிவிட்டர் நிறுவனத்திற்கு வழங்கும் லீகல் பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் முடிவில் மத்திய அரசு இப்படி எச்சரிக்கை விடுத்து இருந்தது.

மோதல்
இந்த மோதல் முற்றவே ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மற்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் ப்ளூ டிக் நீக்கப்பட்டது. இது பெரிய சர்ச்சையான நிலையில்தான் தற்போது மத்திய அரசின் புதிய ஐடி விதிகளை பின்பற்ற எல்லா முயற்சிகளையும் செய்து வருவதாக டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான விளக்கத்தை இந்திய அரசிடம் கொடுத்து இருக்கிறோம்.

முயற்சி
விதிகளை பின்பற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்று டிவிட்டர் கூறியுள்ளது. இதில் மத்திய அரசிடம் டிவிட்டர் மேலும் ஒரு வாரம் அவகாசம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவிற்கான அதிகாரியை நியமிக்க வேண்டும் என்ற விதி உள்ளதால் இது தொடர்பாக ஆலோசித்து வருவதாக டிவிட்டர் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications