3 ஆண்டுகளாக மம்தாவுடன் விடாத மோதல்.. ஆளுநர் டூ துணை ஜனாதிபதி.. யார் இந்த ஜெகதீப் தன்கர்?
டெல்லி: மேற்கு வங்க ஆளுநராக இருந்து குடியரசுத் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் ஜெகதீப் தன்கர். யார் இவர்?
Recommended Video
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் இந்த மாதம் 10 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் ஜெகதீப் தன்கர் போட்டியிட்டார். எதிர்க்கட்சிகளின் சார்பில் மார்க்ரெட் ஆல்வா களம் கண்டார். இதையடுத்து புதிய குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கையும் இன்றே அறிவிக்கப்பட்டது.

பாஜக கூட்டணி
அதில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜெகதீஷ் தன்கர் வெற்றி பெற்றார். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியுடன் மல்லுக்கட்டிய ஜெகதீஷ் தன்கர் யார் இவர்? கடந்த 1951 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கிதானா பகுதியில் பிறந்தவர் ஜெகதீப் தன்கர். அவருக்கு 71 வயதாகிறது.

சட்லஜ் ஆற்று பிரச்சினை வழக்கு
வழக்கறிஞர் ஆவார்.இவர் ராஜஸ்தான் பார் கவுன்சிலில் 1979 இல் பதிவு செய்துள்ளார். 1990 ஆம் ஆண்டு முதல் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞராக பணிபுரிந்த இவர் இந்தியாவின் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் வாதிட்டுள்ளார். சட்லஜ் ஆற்று பிரச்சினை தொடர்பாக கடந்த 2016ஆம் ஆண்டு ஹரியானா மாநில அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டார்.

பாஜகவில் ஐக்கியம்
இவர் பாஜகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். இதையடுத்து 1989 ஆம் ஆண்டு முதல் முறையாக ஜுன்ஜுஹுனு லோக்சபாவுக்கு போட்டியிட்டு தேர்வானார். அப்போது பிரதமராக இருந்த சந்திரசேகர் தலைமையிலான அமைச்சரவையில் அவருக்கு மத்திய இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

இரு ஆண்டுகள் மட்டுமே அமைச்சர் பதவி
ஆயினும் இரு ஆண்டுகள் வரை மட்டும் அமைச்சராக இருந்தார். பின்னர் 1993 ஆம் ஆண்டு நடந்த ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வென்றார். இந்த 5 ஆண்டுகள் பதவி காலத்தை முழுமையாக முடித்த இவர் கடந்த 2019ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கரை நியமித்து அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.

ஆளுநர்
ஆளுநர் பதவியில் இருந்த ஜெகதீப்புக்கும் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே அவ்வப்போது கருத்து மோதல் ஏற்பட்டு வந்தது. பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் தொடர்பாக இருவருக்கும் பனிப்போர் நீடித்தது. ஆளுநர் ஜெகதீப் தன்கரை திரும்ப பெறக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதமும் எழுதியிருந்தார்.

பரபரத்த மேற்கு வங்கம்
மேலும் ஆளுநர் தன்கர் ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்து தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக் கேட்பதாகவும் மம்தா குற்றம்சாட்டியிருந்தார். இவ்வாறு பல்வேறு பனிப்போர் நிலவி வந்த நிலையில் ஜெகதீப் தன்கரை பாஜக அரசு குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவித்திருந்தது. இதையடுத்து கடந்த ஜூலை 17 ஆம் தேதி ஆளுநர் பதவியை தன்கர் ராஜினாமா செய்தார். தற்போது ஆளுநர் பதவியிலிருந்து துணை குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications