இவ்வளவு அமளி துமளிக்கு இடையேயும்.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை.. ஏன் தெரியுமா?
டெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயராமல் உள்ளது. இதற்கு மத்திய அரசின் திட்டம் தான் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 80 டாலர்களாக இருந்தபோது இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.100யை தாண்டியது.
இதற்கிடையே உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்படவில்லை. 128 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.

கச்சா எண்ணெய் விலை உயர்வு
இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதை கண்டிக்கும் வகையில் ரஷ்யா மீது அமெரிக்கா உள்பட பல நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. மேலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கவும் அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கச்சா எண்ணெயானது பீப்பாய்க்கு 139.13 டாலர் என்ற நிலையை எட்டியது. பிறகு 130.29 டாலராக குறைந்தது. இருப்பினும் ஒரேநாளில் 10 சதவீதம் அதாவது 12 டாலர் வரை அதிகரித்தது. அதாவது 10 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது.

14 ஆண்டு இல்லாத நிலை
இது கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத விலை உயர்வாகும். அதாவது இதற்கு முன்பு 2008ல் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 145 டாலராக இருந்தது. அதன்பிறகு அதிகபட்ச அளவை தற்போது எட்டி இருக்கிறது. இதனால் 5 மாநில தேர்தல் முடிந்த பிறகு இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

மாற்றமில்லை
அதன்படி சர்வதேச சந்தையின் விலை அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.20 வரை உயர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. இந்த விலை உயர்வால் தானாகவே அத்தியாவசிய பொருட்களின் விலையும் உச்சம் பெரும். இதனால் கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்பதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். ஆனால் தேர்தல் முடிவடைந்தும் அதிர்ஷ்டவசமாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை.

மத்திய அரசு திட்டம்
இதற்கு மத்திய அரசின் புதிய திட்டங்கள் தான் காரணம் என கூறப்படுகிறது. குறிப்பாக சில்லறை வர்த்தகத்தில் டீசல், பெட்ரோல் விலையை உயர்த்தினாலும் பொதுமக்களை நேரடியாக பாதிக்காத வகையில் கலால்வரியை குறைக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த நவம்பரில் பெட்ரோல் மீது ரூ.5, டீசல் மீது ரூ.10 கலால்வரி குறைக்கப்பட்டது. தற்போதும் ஒரு லிட்டர் பெட்ரோல் மீது 27.90, டீசல் மீது 21.80 என கலால்வரி நீடிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு தான் மத்திய அரசு இதுதொடர்பாக திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

குறைய வாய்ப்பு
இதற்கிடையே தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயராது எனவும், அடுத்த 2 வாரத்தில் 100 டாலர் வரை குறைய வாய்ப்புள்ளதாகவும் துறை சார் வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
-
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாடு.. எந்த நாட்டில் என்னென்ன கட்டுப்பாடுகள் .. முழு விவரம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்!












Click it and Unblock the Notifications