தல டோணியின் அடுத்த அவதாரம்
Recommended Video

துபாய்: டி-20 போட்டிகளில் விளையாடலாமா கூடாதா என்று மற்றவர்கள் விவாதம் செய்து கொண்டிருக்கும் வேளையில், இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் கிரிக்கெட் அகாதெமியை, துபாயில் ஆரம்பித்துள்ளார் தல டோணி.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் டோணி, சமீபத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டி-20 போட்டியில் மெதுவாக விளையாடியதாக முன்னாள் வீரர்கள் சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

36 வயதாகும் டோணி, இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று விவிஎஸ் லக்ஷ்மண் முதலில் கூற, இதுதான்டா சான்ஸ் என்று பல முன்னாள் வீரர்கள் டோணிக்கு எதிராக கருத்துக்களை கூறி வருகின்றனர்.
அதே நேரத்தில் கேப்டன் விராட் கோஹ்லி, கோச் ரவி சாஸ்திரி மற்றும் பல முன்னாள் வீரர்கள் டோணிக்கு விசில் போடு என்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவாதங்கள் நடக்கும் நேரத்தில், துபாயில், இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் புதிய கிரிக்கெட் அகாதெமியை டோணி துவக்கியுள்ளார். உலகில் வேறெங்கும் இல்லாத வசதிகள் இங்கு உள்ளன. இங்கு இந்தியாவில் இருந்து பல சிறந்த கோச்கள் வந்து பயிற்சி அளிக்க உள்ளனர்.
டோணியின் இளம்வயது நண்பரும், 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி முன்னாள் வீரருமான மிஹிர் திவாகர் தலைமையில் இந்த அகாதெமி செயல்பட உள்ளது.
தல டோணி சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், பல புதிய டோணிக்கள் கிடைக்க உள்ளனர்.
-
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
அந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
வங்கி கணக்கில் வந்து விழுந்த ரூ.10 கோடி.. "வேண்டாம்" என திருப்பி கொடுத்த பெண்! என்ன காரணம் தெரியுமா -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications