திண்டுக்கல் மாநகராட்சி வார்டில் "மலர்ந்த" தாமரை.. முதல் வெற்றியை பதிவு செய்த பாஜக!
திண்டுக்கல் மாநகராட்சியில் 1 வார்டில் பாஜக வெற்றி பெற்று தனது வெற்றிக்கணக்கை தொடங்கியுள்ளது.
திண்டுக்கல்: நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப்போட்டியிட்ட பாஜக திண்டுக்கல் மாநகராட்சியில் தனது வெற்றிக்கணக்கை பாஜக பதிவு செய்துள்ளது. 1வது வார்ட்டில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை பாஜக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இவற்றில் மொத்தம் 12,820 வார்டுகள் உள்ளன. ஏற்கெனவே 218 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதம் உள்ள வார்டு உறுப்பினர் பதவிகளை பிடிக்க 57,746 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியுள்ளது. கொரனா பரவல் காலம் என்பதால் அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
அதிமுக, திமுக, பாஜக, மநீம, நாம் தமிழர் கட்சி,அமமுக, பாமக என அரசியல் கட்சிகள் தங்களின் பலத்தை நிரூபிக்க களமிறங்கியதால் பலமுனைப் போட்டி நிலவியது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 23 பேரூராட்சிகள் உள்ளன. திண்டுக்கல் மாநகராட்சி 48 வார்டு கவுன்சிலர்கள் பதவிகளுக்கு மொத்தம் 275 பேர் போட்டியிட்டுள்ளனர்.
நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப்போட்டியிட்ட பாஜக திண்டுக்கல் மாநகராட்சியில் தனது வெற்றிக்கணக்கை பாஜக பதிவு செய்துள்ளது. 1வது வார்ட்டில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை பாஜக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
திண்டுக்கல் மட்டுமல்லாது, நெல்லையிலும் நாகர்கோவிலிலும் பாஜக தனது வெற்றிக்கணக்கை பதிவு செய்துள்ளதால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications