சவுதிக்கு வார்னிங்! மருந்து மூல பொருட்கள் தயாரிக்கும் கம்பெனிகளிலிருந்து வெளியேறுங்கள் - ஈரான்
துபாய்: இன்று காலை ஈரானின் மிக முக்கியமான இயற்கை எரிவாயு வயலான, தெற்கு பார்ஸ் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் இணைந்து தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடி கொடுக்க, ஈரானும் தாக்குதலை மேற்கொள்ள உள்ளது. எனவே முன்னெச்சரிக்கையாக சவுதி மற்றும் கத்தாருக்கு வார்னிங் கொடுத்திருக்கிறது.
சவுதி மற்றும் கத்தாரில், உள்ள பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களிலிருந்து உடனடியாக பணியாளர்களும், பொதுமக்களும் வெளியேற வேண்டும் என்று ஈரான் அறிவுறுத்தியிருக்கிறது. மருந்து நிறுவனங்கள், மருந்துகளைத் தயாரிப்பதற்குத் தேவையான சில அடிப்படை வேதிப்பொருட்களை, பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களிடமிருந்துதான் வாங்குகின்றன.

ஈரான் மீது தாக்குதல்
இன்று காலை ஈரான் மீது பெரிய தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரானின் தெற்கு பகுதியில் உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயல் அமைந்திருக்கிறது. இந்த வயல் ஈரானுக்கு ரொம்ப முக்கியம். இது ஈரானுக்கு முதுகெலும்பை போன்றதாகும். இந்த பகுதியில் ஈரானின் மொத்த எரிவாயு இருப்பில் 50% இருக்கிறது. இப்படியான பகுதியில்தான் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த தாக்குதல் ஈரானை சீண்டியிருக்கிறது.
ஈரான் கொடுத்த வார்னிங்
இந்த தாக்குதலில், ஈரானின் உளவுத்துறை அமைச்சர் எஸ்மாயில் காதிப் நேற்றிரவு நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதை இஸ்ரேல் உறுதி செய்துள்ளது. ஏற்கனவே பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானியும் கொல்லப்பட்டுள்ளார். எனவே டென்ஷனான ஈரான் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறது. இதனால் சவுதி அரேபியா மற்றும் கத்தாருக்கு வார்னிங் கொடுத்திருக்கிறது. இங்குள்ள பெரிய எண்ணெய் வயல்களை தாக்க திட்டமிட்டிருக்கிறது.
எந்த பகுதியில் தாக்குதல்?
சவூதி அரேபியா: சாம்ரெஃப் (SAMREF) சுத்திகரிப்பு நிலையம் மற்றும் ஜுபைல் (Jubail) பெட்ரோகெமிக்கல் வளாகம்.
ஐக்கிய அரபு அமீரகம் (UAE): அல் ஹொஸ்ன் (Al Hosn) எரிவாயு வயல்.
கத்தார்: மெசைத் (Mesaieed) பெட்ரோகெமிக்கல் வளாகம் மற்றும் ராஸ் லஃப்பான் (Ras Laffan) சுத்திகரிப்பு நிலையம்.
இந்த பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்கள் மீதுதான் தாக்குதல் நடத்தப்போவதாகவும், எனவே இங்கு இருக்கும் பணியாளர்கள், இதன் அருகில் இருக்கும் பொதுமக்கள் உடனே பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது. இந்த நிறுவனங்களிடமிருந்துதான், மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் மூல வேதிப்பொருட்களை வாங்குகின்றன.
தயார் நிலையில் ஐக்கிய அரபு அமீரகம்
இந்த எச்சரிக்கைக்கு கத்தார் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஈரானின் தாக்குதல் வெறுமென வளைகுடா நாடுகளின் தாக்குதல் என்று புரிந்துக்கொள்ள கூடாது. மாறாக, சர்வதேச எரிசக்தி பாதுகாப்புக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாக பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஈரானின் அச்சுறுத்தல் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகம் தனது பாதுகாப்பு அமைப்பை தயார் நிலையில் வைத்திருக்கிறது.
இஸ்ரேலை விட்டுவிட்டு, சவுதியை தாக்குவது ஏன்?
இந்த பிரச்சனையில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம், ஈரானை தாக்கியது இஸ்ரேலும், அமெரிக்காவும்தான். ஆனால், பதிலுக்கு அந்த நாடுகளை தாக்காமல், சவுதி மற்றும் கத்தாரை அட்டாக் செய்ய ஈரான் ரெடியாகி வருகிறது. ஈரான் ஏன் இப்படி செய்கிறது? என்பதற்கு பின்னால் இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம், ஈரானை தாக்க சவுதியும், கத்தாரும் இடம் கொடுத்தது என்பதுதான். எங்களை தாக்க இடம் கொடுத்தால், நீங்களும் எங்கள் எதிரியே என சொல்லி, ஈரான் தாக்குதல் நடத்துகிறது.
அதேபோல, நேரடியாக அமெரிக்காவை தாக்குவதை விட, வளைகுடா நாடுகளின் எண்ணெய் வயல்கள் மீது தாக்குதல் நடத்துவது, அமெரிக்காவுக்கு நெருக்கடியை அதிகரிக்கும். எனவேதான் ஈரான் இந்த முடிவை கையில் எடுத்திருக்கிறது.
-
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
கண் கொத்தி பாம்பாக காத்திருக்கும் CIA & மொசாட்.. கொஞ்சம் அசந்தாலும் ஈரான் மொத்தமாக சிதஞ்சிடும் -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
"ஹார்முஸை கடக்க ரூ.18 கோடி.." கப்பல்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்த ஈரான்! பயங்கர பிளான் -
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி -
Dubai Real Estate: துபாயில் வீடு வாங்க போறீங்களா? கவனிக்க வேண்டியவை என்னென்ன? -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்!














Click it and Unblock the Notifications