புலம்பெயர் மணற்துகள்கள்! துபாயில் தமிழ் புத்தகம் வெளியீட்டு விழா! ஆவலோடு பங்கேற்கும் தமிழர்கள்!
துபாய்: துபாயில் புலம்பெயர் மணற்துகள்கள் என்ற தமிழ் கவிதை நூல் வெளியீட்டு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறுகிறது.
சங்கீதா உணவகத்தின் பங்குதாரர் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் துபாயில் பணியாற்றி வரும் ஏராளமான தமிழர்கள் ஆர்வமுடன் பங்கேற்க உள்ளனர்.

பிரபல மலையாளர் எழுத்தாளரான இஸ்மாயில் மேலடி, மலையாளத்தில் எழுதிய கவிதை நூல் தொகுப்பை சுப்ரபாரதிமணியன் என்பவர் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். திருப்பூரில் உள்ள கனவு பதிப்பகம் இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளது.
இதனிடையே துபாயில் உள்ள ஷார்ஜாவில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறும் இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில், கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை நிறுவனர் முகம்மது முகைதீன், திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் மன்சூர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இதேபோல் எழுத்தாளரும் நாடகம் மற்றும் குறும்பட இயக்குநருமான சசி S. குமார் உட்பட இன்னும் பல முக்கியத் தொழிலதிபர்கள் தமிழ் ஆர்வலர்கள் அதில் கலந்து கொள்ளவுள்ளனர். துபாயை பொறுத்தவரை வெள்ளி சனி மட்டுமே வார விடுப்பு நாட்களாகவும் ஞாயிற்றுக்கிழமை பணி நாளாகவும் வழக்கத்தில் இருந்து வருகிறது.
இதனிடையே புலம்பெயர் மணற்துகள்கள் கவிதை நூலின் ஆசிரியரும் மலையாளர் எழுத்தாளருமான இஸ்மாயில் மேலடி பற்றி மலையாள கவிஞர் சச்சிதானந்தன் கூறுகையில், இஸ்மாயில் மேலடியின் கவிதைகள் சில சமயம் ஆழமான அனுதாபமும் சில சமயம் முரண் நகை உள்ள மனோநிலையை பிரதிபலிப்பவையாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications