பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு.. ஈரோட்டில் இளைஞர் அதிரடி கைது.. என்ஐஏ சோதனையை தொடர்ந்து நடவடிக்கை
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்திய நிலையில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக கூறி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Recommended Video
கர்நாடக தலைநகர் பெங்களூரில் கடந்த மாதம் 24ம் தேதி பெங்களூர் திலக் நகர் பகுதியில் அல்குவைதா தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த அக்தர் உசேன் லஸ்கர் என்பவரை கைது செய்தனர். இவர் அளித்த தகவலின்பேரில் தமிழகத்தில் சோதனை நடந்தது.
இந்த சோதனையின்போது சில நாட்களுக்கு முன்பு சேலத்தில் பதுங்கி இருந்த அப்துல் அலி ஜூபா என்பவரை பெங்களூர் போலீசார் கைது செய்தனர்.

என்ஐஏ சோதனை
இதன் தொடர்ச்சியாக ஈரோடு மாணிக்கம்பாளையத்தில் நேற்று முன்தினம் மாலையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்ஐஏ) போலீசாருடன் வந்து ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். நடத்தினர். இந்த சோதனையின்போது வீட்டில் இருந்த செல்போன், மடிக்கணினி, டைரி, சிம்கார்டு, வங்கி புத்தகம் உள்ளிட்டவை கைப்பற்றப்ப்பட்டது.

ஒருவர் கைது
மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் 2 பேரிடம் என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக விசாரிக்க துவங்கினர். இந்த விசாரணையின்போது அவர்கள் 2 பேரிடமும் பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்விகள் கேட்டு பதில் அளிக்கப்பட்டது. இந்த விசாரணையின் முடிவில் நேற்று இரவில் ஒருவர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர் ஈரோடு மாணிக்கம்பாளையம் மெயின் ரோட்டில் வசித்து வரும் 28 வயது நிரம்பிய ஆசிப் என்ற இளைஞர் என்பது தெரியவந்தது.

உபா சட்டத்தில் வழக்கு
இதில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் அவர் மீது ஈரோடு போலீசார் உபா உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்னொவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடரும் சோதனை
கடந்த 25ம் தேதி சேலத்தில் வேலை செய்து வந்த அப்துல் அலி ஜூபா என்பவரை பெங்களூர் போலீசார் கைது செய்த நிலையில் தான் தற்போது ஈரோட்டில் இன்னொருவர் கைது செய்துள்ளார். அதன்படி கடந்த 3 நாட்களில் மட்டும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி சேலத்தில் வெளிமாநில தொழிலாளிகள் 5 பேரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர் -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications