மதுபோதையில் ஆற்றில் குதித்த இளைஞர்.. மின்னல் வேகத்தில் உயிரை காப்பாற்றிய சிறுவன்.. குவியும் பாராட்டு
ஈரோடு : சத்தியமங்கலம் அருகே அதிக மதுபோதையில் ஆற்றில் குதித்த இளைஞரை உயிரை பணயம் வைத்து காப்பற்றிய சிறுவனுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. அதிக அளவில் இருக்கும் மதுக்கடைகளை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கெம்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஜெயராமன். மதுபோதைக்கு அடிமையான இவர் சத்தியமங்கலத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தியுள்ளார். அவர் மிகவும் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக கூறப்படுகிறது.

ஆற்றில் குதித்த இளைஞர்
இதனை தொடர்ந்து ஜெயராமன் தள்ளாடிய நிலையில் உச்சக்கட்ட மதுபோதையில் சத்தியமங்கலம் பவானி ஆற்று பாலத்திற்கு வந்துள்ளார். தனது குடும்பத்தில் உள்ளவர்களை மிரட்டும் நோக்கத்தில் திடீரென பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்துள்ளார். கீழே குதித்த அவர் அங்கிருந்த மரக்கிளையில் சிக்கி தவித்து உள்ளார். ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிலர் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அதிவேகமாக காப்பாற்றினார்கள்
உடனடியாக அவர்கள் சத்தியமங்கலம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் தீயணைப்புத்துறையினர் வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் உட்பட 2 பேர் தங்களது உயிரை பணயம் வைத்து ஜெயராமனை உடனடியாக மீட்டு ஆற்றங்கரைக்கு கொண்டு வந்தனர்.

குவியும் பாராட்டு
''ஆற்றில் இருந்து கீழே குதித்து விட்டோம்'' என்பது கூட தெரியாமல் மதுபோதையில் இருந்த இளைஞரை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.இளைஞரை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய சிறுவன் உட்பட 2 பேருக்கு பொதுமக்கள் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவத்தால் கெம்பநாயக்கன்பாளையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

பொதுமக்கள் கோரிக்கை இதுதான்
தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் மதுபோதையில்தான் இதனை செய்கின்றனர். எனவே குற்றங்களுக்கு முதல் காரணமாக மதுபானம் உள்ளது. ஆகவே அதிக அளவில் இருக்கும் மதுக்கடைகளை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications