இந்தியாவுக்கு மேலும் ஒரு மகுடம்...கொரோனா தடுப்பு மருந்து...கோவாக்சின் மனித பரிசோதனை துவங்கியது!!
ஐதராபாத்: ஒரு வார தாமதத்திற்குப் பின்னர் இன்று ஐதராபாத்தில் இருக்கும் நிசாம் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் கொரோனாவுக்கு எதிரான கோவாக்சின் தடுப்பு மருந்து பரிசோதனை அடிப்படையில் இருவருக்கு செலுத்தப்பட்டது.
Recommended Video

இதுகுறித்து மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் கூறுகையில், ''இன்று காலை 11.30 மணியளவில் நிசாம் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் இரண்டு தன்னார்வலர்களுக்கு பரிசோதனை அடிப்படையில் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தான கோவாக்சின் செலுத்தப்பட்டது. இருவரும் நன்றாக உள்ளனர்'' என்றார்.

டெல்லி ஐசிஎம்ஆர், புனே வைராலாஜி நிறுவனம், ஐதராபாத்தில் இருக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் ஆகியவை இணைந்து கண்டுபிடித்த மருந்து கோவாக்சின். கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட இந்த மருந்து பரிசோதனையில் வெற்றி பெற்றால், ஆகஸ்ட் 15ஆம் தேதி நாட்டு மக்களுக்கு நல்ல செய்தியாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதன் அடிப்படையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே பரிசோதனை அடிப்படையில் இந்த மருந்தை மனிதர்களுக்கு செலுத்திப் பார்க்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தது. பரிசோதனைக்கு 350 தன்னார்வலர்கள் எடுத்துக் கொள்ளப்பட்டனர்.
ஐதராபாத்தில் இருக்கும் நிசாம் மருத்துவ அறிவியல் நிறுவனம் உள்பட பரிசோதனைக்கு 12 நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு இருந்தன. இன்று காலை முதல் டோஸ், மனித சோதனையின் முதல் கட்டமாக இன்று செலுத்தப்பட்டது. இ-மெயில் மூலம் இந்த பரிசோதனைக்கு ஆர்வமாக இருப்பதாக பலரும் தகவல் அனுப்பி இருந்தனர்.
நோய் எதிர்ப்பு சக்தி, உடல் ஆரோக்கியம் ஆகியவை வைத்து தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். ஐதராபாத் மருத்துவமனை நிறுவனத்தில் மட்டும் 60 பேருக்கு இந்த மருந்து செலுத்தப்பட்டு இருக்கிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications