காவிரியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.. 4 ஆண்டுகளுக்கு பின் மேட்டூர் அணை 100 அடியை எட்டியது!
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 1.20 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Recommended Video

பெங்களூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88 அடியை தாண்டியுள்ளது. இந்த நிலையில் தற்போது 4 ஆண்டுகளுக்கு பின் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தொட்டு இருக்கிறது.
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 1.20 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் கபினி அணை வேகமாக நிறைந்தது. அதேபோல் கிருஷ்ணராஜசாகர் அணையும் நிரம்பியது.

இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் அதிகமாக திறந்து விடப்பட்டுள்ளது.மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியுள்ளது. கபினியிலுருந்து 40,416 கனஅடி வீதம் உபரிநீர் திறந்துவிடப்படுகிறது.
அதேபோல் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 80,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் பெரிய அளவில் காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.தற்போது மேட்டூர் அணையில் வெளியேற்றும் நீரின் அளவு 100 கன அடியாக உள்ளது.
குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1000 கனஅடி நீர் வெளியாகிறது. மேட்டூர் அணை 100 அடியை எட்டும் போது அதிகாரிகள் சிறப்பு பூஜை செய்வது வழக்கம்.
இன்று இரவு இல்லை நாளை காலை இந்த பூஜை செய்யபட்டும் என்று கூறப்பட்டுள்ளது. 4 வருடத்திற்கு பின் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டி உள்ளது.2014, ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி கடைசியாக நீர்மட்டம் 100 அடியை எட்டி உள்ளது.
64வது முறையாக நீர்மட்டம் 100 அடியை தொட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 100 அடியானதால் சிறப்பு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications