ஒன்றரை வயது குழந்தையை கொன்று பிளாஸ்டிக் பையில் அடைத்த கொடூரம். சொத்துக்காக கொலை?
மலாத்: ஒன்றரை வயது சிறுவனை அவரது உறவினர்களே கொலை செய்து பிளாஸ்டிக் பையில் அடைத்து வைத்த கொடூரம் உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மலாத் பகுதியை சேர்ந்தவர் தர்மேந்திரா கண்டு. இவரது உறவினரான விக்கி என்பவரும் அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இருவரும் நெருங்கிய உறவினர்கள் என்பதால் தர்மேந்திரா கண்டுவின் ஒன்றரை வயது மகன் விவான் அடிக்கடி விக்கியின் வீட்டிற்கு சென்று விளையாடுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை வெகு நேரம் ஆகியும் விவான் வீட்டிற்கு வரவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் விக்கியின் வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளனர். அங்கும் வரவில்லை எனக் கூறியதால் தர்மேந்திரா கண்டு பல இடங்களில் தேடி அலைந்துள்ளார். பின்னர் குழந்தை காணாமல் போனது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது அந்த நாய் விக்கியின் வீட்டை நோக்கி ஓடியது. வீட்டின் பின்பகுதிக்கு சென்று பிளாஸ்டிக் பையை பார்த்து குறைத்ததுள்ளது. அங்கு சென்ற போலீசார் அந்த பையை பிரித்து பார்த்தனர். அதில் விவான் பிணமாக மூடி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், தர்மேந்திரா கண்டுவின் தந்தை சந்தீபுக்கு உபியில் சில சொத்துக்கள் உள்ளது. அந்த சொத்து தொடர்பாக விவானின் தாய் சோனிக்கும், விக்கியின் மனைவி இந்துவுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரச்சினை எழுந்துள்ளது. இதனை மனதில் வைத்து விவானை விக்கியின் குடும்பத்தினர் கொலை செய்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications