பசுவை கடத்தியதாக சந்தேகம்.. முஸ்லிம் வாலிபரை கொன்று விபத்து போல மாற்ற முயன்ற பசு குண்டர்கள் கைது
டெல்லி: ராஜஸ்ஸதானில், பசு மாட்டை கடத்திச் சென்றதாக கூறி இஸ்லாமியரை அடித்துக் கொன்ற பசு குண்டர்கள் இருவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
ராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் மாவட்டத்தில் உமர் முகமது என்பவர் தலை துண்டிக்கப்பட்டு ரயில்வே தண்டவாளம் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், விசாரணையில் அவர் பசுவை கடத்திச் சென்றதாக சந்தேகத்தின்பேரில் கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து ராம்வீர் குஜ்ஜார் மற்றும் பக்வான் சிங் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனனர். 30களின் வயதுடைய இருவருமே தாங்கள்தான், உமர் முகமதுவை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர்.
ரயிலில் அடிபட்டு உமர் இறந்ததை போல காண்பிக்க வேண்டும் என்பதற்காக, தலையை துண்டித்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். தங்களை பசு காவலர்கள் என அழைத்துக்கொண்டுள்ளனர்.
பசுமாடுகளை ஏற்றிச் சென்ற லாரி சென்ற வழியில் ஆணிகளை தூவி அதை பஞ்சர் செய்து கொலை திட்டம் வகுத்ததாக அவர்கள் கூறியுள்ளனர். கைதான இருவர் மீதும் கொலை, கொலை முயற்சி, கலவரம், சாட்சியங்களை கலைத்தல் போன்ற பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே கொலையான நபரும், அவரது நண்பர்கள் சிலரும் பசுவை கடத்துவதை வாடிக்கையாக கொண்டவர்கள் என காவல்துறை கூறியுள்ளது. ஆனால் உமர் குடும்பத்தார்களோ, அவர் பாலுக்காக பசுமாடு வாங்கச் சென்றபோது தவறாக நினைத்து கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
-
நாளை பக்ரீத்.. தமிழகத்தில் பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை.. ஐகோர்ட் போட்ட முக்கிய உத்தரவு! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications