வங்கத்தில் மகுடம் சூடப்போவது யார்... இன்று 4ஆம் கட்ட வாக்குப்பதிவு.. என்ன நிலைமை?
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இன்று நான்காம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இன்று ஐந்து மாவட்டங்களில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமானோர் வாக்களிக்கவுள்ளனர்.
Recommended Video
மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை மூன்று கட்ட தேர்தல் அங்கு நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில், இன்று அங்கு 44 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் சுமார் 370க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஐந்து மாவட்டங்களில் நடைபெறும் இந்தத் தேர்தலில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
அமைச்சர் பாபுல் சுப்ரியோ, முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரிய தளபதியாகக் கருதப்படும் பார்த்தா சாட்டர்ஜி ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று சுமார் 16 ஆயிரம் வாக்குப்பதிவு மையங்களில் அங்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதற்காக அந்த மாவட்டங்களில் பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் போலீசாருடன் சேர்ந்த சுமார் 30 ஆயிரம் மத்திய ஆயுத போலீஸ் படையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் இந்த முறை எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்கியுள்ளது. இதனால் பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் அங்குத் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை அங்கு எவ்வித மோசமான வன்முறைச் சம்பவமும் ஏற்படவில்லை
மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வரை எட்டு கட்ட தேர்தல் நடைபெறுகிறது. பின்னர், தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுடன் இணைந்து மே 2ஆம் தேதி அங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications