ம.பி.யில் பகீர்... பாஜக அரசு அலட்சியத்தால் 15 நாட்களில் 51 அரசு ஆசியர்களை பலி கொண்டது கொரோனா!
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி அரசின் அலட்சியத்தால் 15 நாட்களில் 51 ஆசியர்கள், கொரோனாவுக்கு பலியாகி உள்ளதாக அம்மாநில ஆசியர் சங்கங்கள் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் மத்திய பிரதேசமும் ஒன்று. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மத்திய பிரதேசத்தில் 9,720 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

கட்டுப்பாடுகள் தீவிரம்
ஆனால் மத்திய பிரதேச பாஜக அரசோ, கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் மாநிலம் முழுவதும் லாக்டவுனை அமல்படுத்த முடியாது. லாக்டவுனை அமல்படுத்துவதற்கு பதிலாக கட்டுப்பாடுகளை தீவிரமாக்குவோம் என்கிறார் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான்.

51 ஆசிரியர்கள் பலி
இந்த நிலையில் மத்திய பிரதேச அரசு ஆசிரியர் சங்கம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 15 நாட்களில் மட்டும் 51 அரசு ஆசிரியர்கள் கொரோனாவால் பலியாகி உள்ளதாக பட்டியலிட்டுள்ளது. கொரோனாவுக்கு பலியான ஆசிரியர்கள் யார்? யார் என்கிற விவரங்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

மாவட்ட வாரியாக உயிரிழப்புகள்
சிந்த்வாரா மாவட்டத்தில் மட்டும் 28 ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளனர். தார் மாவட்டத்தில் 14 ஆசிரியர்கள், பீடல் மாவட்டத்தில் 6, சிவானி மாவட்டத்தில் 10 பேர் என உயிரிழந்துள்ளனர். இதற்கு காரணமே பாரதிய ஜனதா அரசின் அலட்சியம்தான் எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு கூடாது
இதனால் ஆசிரியர்க்களை வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும்; பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கூடாது என ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். இதனிடையே இந்த விவகாரத்தில் முதல்வர் சிவராஜ்சிங் சவுஹான் மீது கடும் குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் முன்வைத்திருக்கிறார் மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications