ஈராக்கில் தெலுங்கானாவைச் சேர்ந்த 600 பணியாளர்கள் தத்தளிப்பு!!
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 600 பேர் ஈராக் போர்முனையில் சிக்கியிருப்பதால் அவர்களை பாதுகாப்பாக தாயகம் திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அம்மாநில துணை முதல்வர் முகமது மெகமூத் அலி தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் ஷியா அரசுக்கு எதிராக சன்னி பிரிவு முஸ்லிம்கள் போர் தொடுத்துள்ளனர். இந்த யுத்தத்தில் ஷியா அரசின் வசம் இருந்த பல நகரங்கள் சன்னி பிரிவு படையான ஐ.எஸ்.ஐ.எஸ். வசம் வீழ்ந்துள்ளன. இந்த ஐ.எஸ்.ஐ.எஸ். படையில் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் இடம்பெற்றுள்ளனர்.

மொசூலில் 40 இந்தியர்கள் கடத்தல்
இதனால் ஈராக்கின் முக்கிய நகரங்களில் பணியாற்றி வந்த சுமார் 18 ஆயிரம் இந்தியர்களின் கதி கேள்விக்குறியாகி உள்ளது. ஏற்கெனவே மொசூல் நகரில் பணியாற்றிய 40 இந்திய கட்டுமானத் தொழிலாளர்கள் கடத்தப்பட்டுள்ளனர். அவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை.

திக்ரீத் நகரில் செவிலியர்கள்..
இதேபோல் சதாம் உசேனின் சொந்த ஊரான திக்ரீத் நகரில் கேரளாவைச் சேர்ந்த 46 செவிலியர்கள் சிக்கியுள்ளனர். அவர்கள் தாங்கள் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கூடலூர் செவிலியர்கள்
மேலும் தமிழகத்தின் கூடலூரைச் சேர்ந்த செவிலியர்கள் 6 பேரும் ஈராக் போர்க்களத்தில் சிக்கியிருக்கின்றனர். அவர்களின் நிலைமை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

உதவி மையங்கள்..
இப்படி ஈராக்கில் இந்தியர்கள் தத்தளித்து வரும் நிலையில் டெல்லியிலும் ஈராக் தலைநகர் பாக்தாத்திலும் சிறப்பு 24 மணி நேர உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சிறப்பு தூதர்
மேலும் ஈராக்கில் கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்கவும் போர்க்களத்தில் சிக்கியோரை பாதுகாப்பாக மீட்கவும் அந்நாட்டுக்கான முன்னாள் தூதர் சுரேஷ் ரெட்டியை மத்திய அரசு சிறப்புத் தூதராக அனுப்பி வைத்துள்ளது. அவர் நேற்று பாக்தாத் சென்றடைந்தார்.

600 தெலுங்கானா பணியாளர்கள்..
இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 600 பணியாளர்கள் போர்க்களத்தில் சிக்கியிருக்கின்றனர். இவர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் 600 பேர் பற்றிய முழு விவரங்க்ளையும் சேகரிக்கவும் மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது.

உதவி மையம்
ஈராக்கில் தத்தளித்து வரும் தெலுங்கானா பணியாளர்கள் குறித்து தகவல் அறியவும் ஒரு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான எண்கள்: 040-23220603, 9440854433.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட்












Click it and Unblock the Notifications