எல்லையில் ஒரே தொல்லை.. 7 மாதத்தில் 92 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!
இந்த ஆண்டில் மட்டும் எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 92 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லி: எல்லையில் ஊடுருவ முயலும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவல் குறித்து இந்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்த ஆண்டில் மட்டும் அதாவது ஜூலை 2ம் தேதி வரை இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளை ராணுவம், மத்திய பாதுகாப்பு படையினரின் முயற்சியால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர்.

ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்படும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
2012ம் ஆண்டில் 67 தீவிரவாதிகளும், 2013ல் 72 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு அதாவது 2014 ம் ஆண்டில் 110 தீவிரவாதிகளும், 2015ல் 108 பேரும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர்.
இதே போன்று 2016ம் ஆண்டில் 150 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் 2017 ஜூலை 2 வரை 92 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சம் கூறியுள்ளது.
2016 ல் 371 முறை இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றதாக புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மே மாதம் வரை 124 முறை ஊடுருவ முயற்சி நடந்துள்ளது.
இதே போன்று ஜூலை 2 வரை 168 பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்களும், 142 கல்வீச்சு சம்பவங்களும் நடந்துள்ளன. அதிகபட்சமாக 2016 ஜூலை மாதம் மட்டும் 820 கல்வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன.
எல்லை பகுதியில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளை தடுத்து, அழித்து வரும் அதே சமயத்தில் முக்கிய தீவிரவாதிகளையும் கண்டறிந்து, அவர்களை தேடும் பணியையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications