மாதக்கணக்கில் நடந்த கூட்டு வன்புணர்வு.. 6 மாத கர்ப்பமான 9ம் வகுப்பு மாணவி.. ஆந்திராவில் கொடூரம்
அமராவதி: ஆந்திரப் பிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் 9ம் வகுப்பு சிறுமியை சிறுமி 6 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிய வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோரை இழந்த சிறுமி ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி பயின்று வந்துள்ள நிலையில், கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் ஆந்திரா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

6 மாத கர்ப்பம்
நாடு முழுவதும் கடந்த 2021ம் ஆண்டில் மட்டும் பெண் குழந்தைகளுக்கு எதிராக வன்முறைகள் நிகழ்த்தப்பட்டதாக 33,036 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது சராசரியாக நாளொன்றுக்கு சுமார் 90 வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இவ்வாறு இருக்கையில் தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் ஆந்திராவில் பதிவாகியுள்ளது. ஆதரவற்றோர் ஆசிரமத்தில் தங்கி பயின்று வந்த 9ம் வகுப்பு பயின்று வந்த 14வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டதில் தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

கூட்டு பாலியல் பலாத்காரம்
இந்நிலையில் கடந்த 10ம் தேதி நடந்த மருத்துவ பரிசோதனையில் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இதனையடுத்து சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில் சில சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அதாவது, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அடையாளம் தெரியாத நபர்கள் மூன்று பேர் தன்னை கடத்தி ஆசிரமத்திற்கு அருகே உள்ள பாழடைந்த அரசு பள்ளியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் கூறியுள்ளார்.

வழக்குப்பதிவு
மேலும், ளஇந்த சம்பவம் தொடர்ந்து நடைபெற்றிருக்கிறது என்றும் சிறுமி வாக்குமூலம் அளித்திருக்கிறார். இதன் காரணமாக தற்போது சிறுமி கரப்பமாகியுள்ளார். சம்பவம் தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம் 363, 376 (2) மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து இதற்கு காரணமான விஜயவாடாவை சேர்ந்த பிரகாஷ் என்பவரை முதற்கட்டமாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அவருடன் இருந்த கூட்டாளி யார் என விசாரித்ததில் மற்றொரு அதிர்ச்சி தகவலும் வெளியானது.

கைது
அதாவது, இந்த குற்றத்தில் சிறார் ஒருவரும் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மற்றொரு குற்றவாளியான சாய் வேறு ஒரு குற்றத்திற்காக தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications