5 கொடூரர்கள்.. ஆட்டோவில் பயணித்த பெண்ணை கடத்தி.. கூட்டு பாலியல் பலாத்காரம்.. குஜராத்தில் கொடுமை
காந்தி நகர்: குஜராத் மாநிலத்தில் 31 வயது பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் ஏற்கெனவே மனநல சிகிச்சை எடுத்து வந்த நிலையில் தற்போது இந்த கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக காவல்துறை குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகிறது.

ஆட்டோ
குஜராத் மாநிலத்தின் பொடாட் நகரில் 31 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, "கடந்த 27ம் தேதி எங்களுக்கு ஒரு புகார் வந்தது. புகாரை விசாரிக்கையில் சில அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. பாதிக்கப்பட்ட பெண்மணி 26ம் தேதி பொடாட் நகரிலிருந்து கத்தாவுக்கு செல்ல ஆட்டோ ஒன்றை பிடித்துள்ளார்.

சிகிச்சை
கத்தாவில் இவரின் தாயார் இருக்கின்றனர். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி இருந்தாலும், கடந்த சில நாட்களாக மனநலன் பாதிப்புடன் இருந்திருக்கிறார். அவரது குடும்பத்தினர் உதவியுடன் அப்பெண்மணிக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த சிகிச்சையை தொடர்ந்து எடுத்துக்கொண்டிருக்கிறார். இச்சூழலில்தான் அவர் தனது தாய் வீட்டுக்கு பயணப்பட்டுள்ளார். அப்போது, ஆட்டோவில் வேறு சில திடீரென வந்துள்ளனர்.

கூட்டு பாலியல் பலாத்காரம்
இதை எதிர்பாராத அப்பெண்மணி கூச்சலிடுவதற்குள் ஆட்டோ மெயின் ரொட்டிலிருந்து பிரிந்து ஆளரவமற்ற பகுதிக்குள் நுழைந்துள்ளது. பின்னர் அங்கு அப்பெண்ணை ஒருவர் பின் ஒருவராக 5 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றனர். அப்பெண் கூச்சலிட்டபோது தாக்கியுள்ளனர். பின்னர் அங்கிருந்து கைகால்களை கட்டி, வாயை மூடி வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து அடுத்த நாள் மதியம் வரை அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

புகார்
இதனையடுத்து அங்கிருந்து எப்படியோ தப்பித்து வந்த அப்பெண் தனது தந்தையிடம் இது குறித்த விவரித்துள்ளார். ஏற்கெனவே மனநலன் பாதிப்புக்கு சிகிச்சை பெற்றிருந்ததாலும், தற்போது கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்ததாலும் அப்பெண்மணி அதீத பதற்றமடைந்துள்ளார். அவரது தந்தை காவல் நிலையத்திற்கு வந்து எங்களிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளோம். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்." என்று கூறியுள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது நிகழ்ந்துள்ள இந்த கூட்டு பாலியல் பலாத்கார சம்பவம் ஆளும் பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications