அரசு ஊழியர்கள் லேட்டாக வருவதை தடுக்க இணையதளம் அறிமுகம்
டெல்லி: அரசு ஊழியர்கள் ஒழுங்காக அலுவலகதத்திற்கு வருவதை பதிவு செய்ய புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் நினைத்த நேரத்திற்கு வருவது தடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். அதன்படி அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரும் நேரம், கிளம்பும் நேரம் ஆகியவற்றை பதிவு செய்ய புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட Attendance.gov.in என்ற இணையதளத்துடன் அரசு அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டர்கள் இணைக்கப்பட்டுள்ளன.

அரசு ஊழியர்கள் யாராக இருந்தாலும் அலுவலகத்திற்குள் வந்ததும் ஆதார் எண் மற்றும் கை விரல் ரேகையை காண்பித்து வருகையை பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் ஒருவர் எப்பொழுது அலுவலகத்திற்கு வருகிறார், செல்கிறார் என்பது தெரியும்.
அலுவலகத்தின் வாயிலில் உள்ள ஸ்கேனில் ஊழியர்கள் தங்கள் விரலை காண்பித்துவிட்டு தான் நுழைய முடியும். பிரதமராக பதவியேற்ற பிறகு அரசு அலுவலகங்களில் தூங்கும் ஆவணங்களை உடனடியாக கிளியர் செய்யுமாறு மோடி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இணையதளத்தில் இதுவரை டெல்லியில் உள்ள 149 அரசு நிறுவனங்களும், 50 ஆயிரம் ஊழியர்களும் பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கையை விரைவில் இரண்டு மடங்காக்க திட்டமிடப்பட்டுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications