ரயில்ல போகவே ஆள் இல்லையாம், புல்லட் ரயில் கேக்குதா? ஆர்.டி.ஐ பதிலில் அதிர்ச்சி தகவல்
மும்பைக்கும் அகமதாபத்துக்கும் இடையில் புல்லட் ரயில் விடப்பட இருக்கும் சூழ்நிலையில், அந்த மார்க்கத்தில் ஓடும் ரயில்களே நஷ்டத்தில் ஓடுவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
டெல்லி: மகாராஷ்டிரா தலைநகர் மும்பைக்கும், குஜராத்தின் அஹமதாபாத்துக்கும் இடையில் 2023க்குள் புல்லட் ரயிலை இயக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஜப்பான் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறது.
இதற்கான அறிவிப்பை சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி வெளியிட்டார். மேலும் 1.10 லட்சம் கோடி இதற்கு செலவு ஆகும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் தனி நபர் ஒருவரால் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்வியில் அகமதாபாத்துக்கும், மும்பைக்கும் இடையில் ஓடும் ரயில்கள் காலியாக செல்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இதன்காரணமாக ரயில்வே துறைக்கு நிறைய நஷ்டம் ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் புல்லட் ரயில் திட்டம்
மகாராஷ்டிரா தலைநகர் மும்பைக்கும், குஜராத்தின் அஹமதாபத்துக்கும் இடையில் 2023க்குள் புல்லட் ரயிலை இயக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுக்காக ஜப்பான் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கான அறிவிப்பை சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி வெளியிட்டார். மேலும் 1.10 லட்சம் கோடி இதற்கு செலவு ஆகும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். மேலும் இந்த திட்டத்தை அறிவித்த போது ''இது என்னுடைய பல கால கனவு'' என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.

மின்னல் வேகத்தில் செல்லும் புல்லட்
இந்த புல்லட் ரயில் அதிகபட்சமாக 350கிமீ வேகத்தில் செல்லும் என்று கூறப்பட்டுள்ளது. இது இந்தியாவில் தற்போது வேகமாக செல்லும் ரயிலைவிட இரண்டு மடங்கு அதிகம் ஆகும். மேலும் தற்போது அஹமதாபாத் மும்பை இடையிலான 500 கிமீ தூரத்தை ரயிலில் கடக்க 8ல் இருந்து 10 மணி நேரம் ஆகிறது. ஆனால் புல்லட் ரயில் மூலம் 3 மணி நேரத்தில் இந்த தூரத்தை கடக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதில் 750 பயணிகள் செல்லலாம்.

ஆர்.டி. ஐயில் தகவல்
இந்த நிலையில் இந்திய ரயில்வே துறையிடம் கேள்வி கேட்டு சில நாட்களுக்கு முன் ஆர்.டி,ஐ ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் மும்பை அஹமதாபாத் இடையில் ஓடும் ரயில் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது. தற்போது அதில் அதிர்ச்சி அளிக்கக் கூடிய பதில்கள் வெளி வந்து இருக்கிறது. அதன்படி இந்த மார்க்கத்தில் ஓடும் ரயில்கள் அனைத்தும் ஆள் இல்லாமல் நஷ்டமாக ஓடுவதாக கூறப்பட்டுள்ளது.

தோல்வி அடையும்
மேலும் அந்த பதிலில் ''ஒவ்வொரு வருடமும் 30 கோடி பணம் இதனால் நஷ்டம் ஆவதாகவும். ரயில் 40 சதவிகிதத்துக்கும் அதிகமான இடங்கள் காலியாக செலவதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் பாதி பேர் முன்பதிவு இருக்கையில் செல்வதில்லை'' என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து சாதாரண ரயிலே அங்கு காலியாக செல்வதால் புல்லட் ரயிலில் எப்படி மக்கள் செல்வார்கள் என்று நிறைய பேர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். சிலர் இந்த தகவலில் இருந்து புல்லட் ரயில் திட்டம் தோல்வி அடையும் என்றும் கூறியிருக்கின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications