நாடு திரும்ப முயன்று கைதான ரோஹிங்கியாக்களில் 27 பேர் அகதிகள்.. ஐநா ஆணையம் புதிய தகவல்
Recommended Video

அகர்தலா:திரிபுராவில் சிறைப்படுத்தப்பட்டுள்ள 31 ரோஹிங்கியாக்களில் 27 பேர் அகதிளாக பதிவு செய்தவர்கள் என்று ஐ.நா. அகதிகள் ஆணையம் கூறியுள்ளது.
கடந்த ஜனவரி 18ம் தேதி முதல் திரிபுரா அருகே உள்ள இந்திய- வங்கதேச எல்லைப்பகுதியில் சிக்கிய ரோஹிங்கியா அகதிகளை கையாள்வதில் இந்திய படைகளுக்கும் வங்கதேச படைகளுக்கும் பிரச்னை எழுந்தது. அகதிகளை தங்கள் நாட்டு எல்லைக்குள் தள்ளுவதாக இரு படைகளும் பரஸ்பரமாக குற்றம்சாட்டி வந்தன.

அதன் தொடர்ச்சியாக இரு படைகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. அதன் பின்னர் 31 ரோஹிங்கியா அகதிகளும் திரிபுரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்பு, 5 பேர் கொண்ட ஒரு ரோஹிங்கியா குடும்பத்தின் மீதும் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ரோஹிங்கியா அகதிகளின் மீதும் மியான்மருக்கு நாடுகடத்தும் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது.
திரிபுராவில் சிறைவைக்கப்பட்டுள்ள 31 ரோஹிங்கியா அகதிகளும் முன்னர் ஜம்மு & காஷ்மீரில் அமைந்திருக்கும் அகதி முகாமில் வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மியான்மரிலிருந்து அகதிகளாக வெளியேறிய 40,000 த்திற்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள், இந்தியா முழுவதும் பல்வேறு முகாம்களில் வசித்து வருகின்றனர். அதில் 18,000 பேர் ஐ.நா.விடம் பதிவு செய்தவர்கள்.
இந் நிலையில், திரிபுரா அருகே உள்ள இந்திய- வங்கதேச எல்லையில் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ள 31 ரோஹிங்கியா அகதிகளில் 27 பேர் அகதிகளாக ஐ.நா.விடம் பதிவு செய்துள்ளனர் என ஐ.நா. அகதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
மீதமுள்ள 4 பேர் குழந்தைகள் என்றும் அவர்கள் ஐ.நா.விடம் பதியவில்லை என்றும் அகதிகள் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. அதே நேரத்தில் அகதிகளை துன்புறுத்தக்கூடிய நாட்டுக்கு திருப்பி அனுப்பக் கூடாது என்ற சர்வதேச விதியை இந்திய அரசு பின்பற்ற வேண்டும் என்றும் ஐ.நா. அகதிகள் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications