நாடு திரும்ப முயன்று கைதான ரோஹிங்கியாக்களில் 27 பேர் அகதிகள்.. ஐநா ஆணையம் புதிய தகவல்
Recommended Video

அகர்தலா:திரிபுராவில் சிறைப்படுத்தப்பட்டுள்ள 31 ரோஹிங்கியாக்களில் 27 பேர் அகதிளாக பதிவு செய்தவர்கள் என்று ஐ.நா. அகதிகள் ஆணையம் கூறியுள்ளது.
கடந்த ஜனவரி 18ம் தேதி முதல் திரிபுரா அருகே உள்ள இந்திய- வங்கதேச எல்லைப்பகுதியில் சிக்கிய ரோஹிங்கியா அகதிகளை கையாள்வதில் இந்திய படைகளுக்கும் வங்கதேச படைகளுக்கும் பிரச்னை எழுந்தது. அகதிகளை தங்கள் நாட்டு எல்லைக்குள் தள்ளுவதாக இரு படைகளும் பரஸ்பரமாக குற்றம்சாட்டி வந்தன.

அதன் தொடர்ச்சியாக இரு படைகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. அதன் பின்னர் 31 ரோஹிங்கியா அகதிகளும் திரிபுரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்பு, 5 பேர் கொண்ட ஒரு ரோஹிங்கியா குடும்பத்தின் மீதும் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ரோஹிங்கியா அகதிகளின் மீதும் மியான்மருக்கு நாடுகடத்தும் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது.
திரிபுராவில் சிறைவைக்கப்பட்டுள்ள 31 ரோஹிங்கியா அகதிகளும் முன்னர் ஜம்மு & காஷ்மீரில் அமைந்திருக்கும் அகதி முகாமில் வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மியான்மரிலிருந்து அகதிகளாக வெளியேறிய 40,000 த்திற்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள், இந்தியா முழுவதும் பல்வேறு முகாம்களில் வசித்து வருகின்றனர். அதில் 18,000 பேர் ஐ.நா.விடம் பதிவு செய்தவர்கள்.
இந் நிலையில், திரிபுரா அருகே உள்ள இந்திய- வங்கதேச எல்லையில் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ள 31 ரோஹிங்கியா அகதிகளில் 27 பேர் அகதிகளாக ஐ.நா.விடம் பதிவு செய்துள்ளனர் என ஐ.நா. அகதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
மீதமுள்ள 4 பேர் குழந்தைகள் என்றும் அவர்கள் ஐ.நா.விடம் பதியவில்லை என்றும் அகதிகள் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. அதே நேரத்தில் அகதிகளை துன்புறுத்தக்கூடிய நாட்டுக்கு திருப்பி அனுப்பக் கூடாது என்ற சர்வதேச விதியை இந்திய அரசு பின்பற்ற வேண்டும் என்றும் ஐ.நா. அகதிகள் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications