4 மாநில சட்டசபை தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை: ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு
டெல்லி: மகாராஷ்டிரா, ஹரியானா, ஜம்மு காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி தொடங்கிய வேகத்தில் டெல்லி மாநில சட்டசபையில் கணிசமான இடங்களை கைப்பற்றியது. பின்னர் லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் வேட்பாளர்களை களமிறக்கிப் பார்த்தது ஆம் ஆத்மி கட்சி.

ஆனால் பஞ்சாப் மாநிலத்தில்தான் 4 இடங்களில் அந்த கட்சியால் வெல்ல முடிந்தது. இந்த நிலையில் விரைவில் மகாராஷ்டிரா, ஹரியானா, ஜம்மு காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன.
இந்த சட்டசபை தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடப் போவதில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
அதே நேரத்தில் பஞ்சாப் மாநிலத்தில் ஆகஸ்ட் 21-ந் தேதி நடைபெற உள்ள 2 தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் டெல்லி மாநில சட்டசபை தேர்தலுக்கு முன்னுரிமை கொடுத்து நாடு முழுவதும் உள்ள ஆம் ஆத்மி தொண்டர்கள் செயல்பட வேண்டும் என்றும் அரவிந்த் கேஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications