சொந்த கட்சியினராலேயே ரோஜாவுக்கு நேர்ந்த கொடுமை.. சித்தூர் அருகே பரபரப்பு
சித்தூர்: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நகரி தொகுதி, எம்.எல்.ஏ மற்றும் ஆந்திர பிரதேச தொழில்துறை உள்கட்டமைப்பு கழக (ஏபிஐஐசி) தலைவரான ரோஜாவின் கார், அவரது சொந்தக் கட்சியினராலேயே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. நல்ல வேளையாக ரோஜா தப்பினார்.
ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரோஜா. தொழில்துறை உள்கட்டமைப்பு கழக தலைவராக அவரை நியமித்தார் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. இது அமைச்சருக்கு ஈடான பதவியாகும்.
இப்படி, கட்சியில் நல்ல செல்வாக்கோடு வலம் வரும் ரோஜா மீது சொந்த கட்சிக்குள்ளேயே சிலருக்கு பொறாமை எழுந்துள்ளது.

உட்கட்சி பூசல்
இப்படி, பொறாமையால் பொங்கிக்கொண்டு இருப்பவர்தான், ஒன்றிய குழு உறுப்பினர் அம்முலு. இருவருக்கும் ஏழாம் பொருத்தம். அவ்வப்போது ரோஜா மற்றும் அம்முலு ஆதரவாளர்கள் இடையே உரசல் நிலவி வருகிறது. இந்த நிலையில்தான், சித்தூர் மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க ரோஜா இன்று சென்றார்.

ரோஜா பங்கேற்பு
சித்தூர் மாவட்டம், கே.வி.பி.புரத்தில் கிராமச் செயலகத்தின் தொடக்க விழாவை நடைபெற்றது. இதில்தான் ரோஜா பங்கேற்பதாக இருந்தது.
அப்போது அம்முலு குழுவைச் சேர்ந்த சுமார் 200 பேர் ரோஜா காரை முற்றுகையிட்டனர். சிலர் கல்வீசி தாக்கினர். இதனால் ரோஜாவும், அவர் ஆதரவாளர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

போலீஸ் வருகை
இதையடுத்து போலீசார் விரைந்து வந்து, கூட்டத்தை கலைத்தனர். ரோஜாவை பத்திரமாக அங்கிருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து ரோஜா தனது கோபத்தை வெளிப்படுத்தியதோடு, காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பல பிரிவுகளில் வழக்கு
ஐபிசியின் 143, 341, 427, 506, 509, 149 பிரிவுகளின் கீழ் பொலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இருப்பினும் இதுவரை இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை. அம்முலு ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியாக தகவல்கள் கூறினாலும், ரோஜா இதை வெளிப்படையாக சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications