2015ல் அக்னி-5 ஏவுகணை ராணுவத்தில் இணைக்கப்படும் : பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் தகவல்
டெல்லி: தேவையான வளர்ச்சி சோதனைகள் முடிவடைந்த பிறகு அக்னி-5 ஏவுகணை அடுத்த ஆண்டு ஆயுத படையில் இணைக்கப்படும் என பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் அவினாஷ் சந்தர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது :-
கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து 5,500 கிமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் வாய்ந்த அக்னி-5 ஏவுகணை, வளர்ச்சி சோதனைகள் நிறைவடைந்த பிறகு அடுத்த ஆண்டு ஆயுத படையில் இணைக்கப்படும்.
வளர்ச்சி பணிகளை நிறைவு செய்ய இன்னும் இரண்டு அல்லது மூன்று சோதனைகள் செய்யப்படவுள்ளன.இந்த சோதனைகள் அடுத்த ஆண்டுக்குள் நிறைவு பெறும் என்று எதிபார்க்கப்படுகிறது.
முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ் அரிகாண்ட் அணு நீர்மூழ்கிகப்பலின் சோதனை இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் நடைபெறும்' என அவர் கூறினார்.
அக்னி திட்டம் 1983ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அக்னி ஏவுகணை 17 மீட்டர் நீளமும், 50 டன் எடையும் கொண்டது. இது 3 கட்டமாக தாண்டி சென்று 5000 கிலோ மீட்டர் தூரம் வரை வெற்றிகரமாக செல்ல கூடிய திறன் உடையதாகும். கடந்த 2 ஆண்டுகளில் இரண்டு முறை அக்னி-5 வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.
அணு ஆயுதத்தைத் தாங்கிச் செல்லும் இந்த ஏவுகணைகள் மூலம் உதாரணமாக இங்கிருந்தபடி, சீனாவில் உள்ள பீஜிங், ஷாங்காய் நகரங்களை தாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications