காவிரி நடுவர் மன்ற தீர்ப்பால் விவசாயம் பாதிப்பு.. சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு வாதம்
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி: ஆண்டுக்கு 400 டிஎம்சி நீர் கிடைக்க வேண்டிய நிலையில் 230 டிஎம்சிதான் கிடைக்கிறது என கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது.
கடந்த 2007ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பிற்கு எதிராக, தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன. இந்த வழக்கு பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் இறுதி விசாரணை 11ம் தேதி முதல் தினசரி நடந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, கர்நாடக தரப்பில் வாதிடுகையில், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பால் கர்நாடக மாநிலத்தில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
மேலும், ஆண்டுக்கு 400 டிஎம்சி நீர் கிடைக்க வேண்டிய நிலையில் வெறும் 230 டிஎம்சி நீர்தான் கிடைக்கிறது என்றும் உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
நேற்று நடைபெற்ற விசாரணையின் போதும், ஒப்பந்தத்தில் உள்ள அளவை விட, சாகுபடி பகுதிகளை தமிழக அரசு அதிகரித்துள்ளது என்றும், ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து செயல்பட்டு வருவது தமிழக அரசு தான் என்று கர்நாடக அரசு குற்றம்சாட்டியது. இதற்கு மாநிலங்கள் அனைத்தும் நாட்டின் அங்கம்தான் என்ற நீதிபதிகள் கூறியது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications