காற்று மாசுபாடு: டெல்லியில் ஆண்டுக்கு 30 ஆயிரம் பேர் இறப்பு ! ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
டெல்லி: டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக ஆண்டுக்கு 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பதாக மத்திய அறிவியல் மற்றும் சூழலியல் மையம் ஒரு ரிப்போர்டை வெளியிட்டுள்ளது.
தற்போது உலக வெப்பமயமாதல், பருவ நிலை மாற்றங்கள், புவி வெப்பமயமாதல் போன்ற பிரச்சனைகள் உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றன. இந்நிலையில் அதிகரித்து வரும் மக்கள் தொகை, வாகன எண்ணிக்கை உயர்வு போன்ற முக்கிய காரணங்களால் தலைநகர் டெல்லி பெருமளவில் மாசடைந்த நகரமாக மாறியுள்ளது.

இந்தப் புகை மாசுவால் சுற்றுச்சூழல் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இதைத் தடுக்க டெல்லி அரசு வாகன குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், சுற்றுச்சுழலுக்கும் உடல் நலத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து மத்திய அறிவியல் மற்றும் சூழலியல் மையம் ஆய்வு நடத்தியது.
இதில், தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் புகை, வாகனங்களிலிருந்து வெளிப்படும் புகை, வீடுகளில் சமையல் செய்யும்போதும் வெளிப்படும் புகை, அதனால் ஏற்படும் வெளிப்புற காற்று மாசுபாடு, உட்புற காற்று மாசுபாடு ஆகியவற்றை கொண்டு இந்த ஆய்வினை மேற்கொண்டது. அந்த ஆய்வின் அறிக்கையை சூழலியல் மையம் இன்று வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கையின்படி, 2000-ம் ஆண்டில் 8 லட்சமாக இருந்த டெல்லியின் மக்கள் தொகை 2012-ம் ஆண்டில் 32 லட்சமாக ஆகியுள்ளது. கடந்த ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தால் உலகில் மிகவும் மாசடைந்த நகரமாக அறிவிக்கப்பட்ட டெல்லியில், காற்று மாசுபாட்டினால் ஆண்டுக்கு 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை உயிரிழப்பு ஏற்படுவதாக தெரிவித்துள்ளது.
மேலும் ஒரே நேரத்தில் ஏற்படும் வானிலை மாற்றம், காலநிலை மாற்றம் ஆகியவற்றால் இந்தியாவில் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் அதிகமாக ஏற்படுவதாகவும் மத்திய அறிவியல் மற்றும் சூழலியல் மையம் கூறியுள்ளது.
.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications